“திரைப்படங்கள் மூலம் மக்களிடம் பக்தியை வளர்க்க வேண்டும்” என சரத்குமார் தெரிவித்த கருத்து தற்போது பேசுபொருளாகியுள்ளது .
‘கண்ணப்பா’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட நடிகர் சரத்குமார் தெரிவிக்கையில்,
“கண்ணப்பா ஒரு சிவபக்தனின் வாழ்க்கைக் கதை. விஷ்ணு மஞ்சு நடித்த இந்த படத்தில், ஒரு நம்பிக்கையற்றவர் சிவபக்தராக மாறும் உளவுத்தாக்கலையும், மனப்போராட்டத்தையும் கதையாக சொல்லியிருக்கிறார்கள். இது ஒரு தரமான ஆன்மீக கதை.
இன்று, வேகமான வாழ்க்கையில் பக்தி, கடவுள் பற்றிய நம்பிக்கையை மக்கள் மறந்து விடுகிறார்கள். அதனை மீண்டும் மக்களிடம் கொண்டு செல்லும் ஒரு வழி திரைப்படம். படங்கள் மூலம் பக்தியையும், ஆன்மீகத்தையும் நமக்குள் விதைக்க முடியும்.
இந்த படம் கண்ணப்ப நாயனாரின் வாழ்க்கையை விஷ்ணுவின் பார்வையில் சொல்லுகிறது. நியூசிலாந்தில் இயற்கையுடன் 120 நாட்கள் படம் எடுத்ததிலும், அந்த காலத்திய உணர்வை படத்தில் காட்டியிருப்பதில் பெருமை இருக்கிறது.
இளைய தலைமுறையினருக்காக இந்த கதைகள் சொல்லப்பட வேண்டும். திரைப்படங்கள் கலை மட்டுமல்ல, மக்கள் உள்ளத்தில் நம்பிக்கையை உருவாக்கும் கருவி. எனவே இப்படங்கள் மூலம் பக்தியை வளர்க்க வேண்டும்.” என்றார்.








