கொழும்பிலிருந்து மன்னார் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த அருட்சகோதரிகள் சென்ற வாகனம் இன்று (22) அதிகாலை சுமார் 3.30 மணியளவில் பறையநாளங்குளம் இரும்புப் பாலம் அருகே விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் வாகனத்தில் பயணித்த நான்கு அருட்சகோதரிகள் காயமடைந்த நிலையில், அவசர சிகிச்சைக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருந்ததால், மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
விபத்துக்குள்ளானவர்கள் மன்னாரைச் சேர்ந்த மாசற்ற அமலோற்பவ அன்னை சபையைச் சேர்ந்த அருட்சகோதரிகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.








