பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் ஜெயசிங்க ஆராச்சிகே ஹேமந்த எனப்படும் ‘பத்தல ஹீன் மஹத்தயா’ என்பவருக்குச் சொந்தமான ஒரு கணக்கின் மூலம் ரூ.1.75 பில்லியனுக்கும் அதிகமான பரிவர்த்தனைகள் நடத்தப்பட்டதாக பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.
பொலிஸ் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் மற்றும் அறிவுசார் சொத்து விசாரணை பிரிவால் நடத்தப்பட்ட விசாரணைகளில், 2021 மற்றும் 2023 க்கு இடையில் 03 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் பரிவர்த்தனைகள் நடந்துள்ளன என்பது தெரியவந்துள்ளது.

போதைப்பொருள் கடத்தல்காரரின் சொத்துக்கள் குறித்து நடத்தப்பட்ட விசாரணையின் போது இந்தப் பணப் பரிவர்த்தனைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவை அவரது மனைவியின் பெயரில் பதிவு செய்யப்பட்டு, கடந்த காலங்களில் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன.
இது தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்ய ‘பத்தல ஹீன் மஹத்தயா’வின் மனைவி சி.ஐ.டி முன் ஆஜரான பின்னர் நேற்று (31) கைது செய்யப்பட்டார். பின்னர் நேற்று (31) வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், அவர் கடுமையான பிணை நிபந்தனைகளின் கீழ் விடுவிக்கப்பட்டார்.
‘பத்தல ஹீன் மஹத்தயா’வின் சொத்துக்கள் குறித்து மேலும் விசாரணைகள் தொடர்கின்றன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.








