தெலுங்கானா மஹபூப்நகர் மாவட்டம் ஜட்சர்லாவில் உள்ள பேக்கரியொன்றில் வாங்கிய சிக்கன் பப்ஸில் இறந்த பாம்பு ஒன்று கிடந்துள்ளது.
பெண்ணொருவர் தனது குழந்தைகளுக்காக சிக்கன் பப்ஸ் வாங்கிச் சென்றுள்ளார்.
வீட்டுக்குச் சென்று பப்ஸை திறந்தபோது அதில் இறந்த பாம்பைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
உடனே பேக்கரி உரிமையாளரிடம் சென்று கேட்டபோது அவர் அலட்சியமாக பதில் கூறியதால் கோபமடைந்த அந்தப் பெண் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.








