Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பிரமிட் பண மோசடியில் ஈடுபட்ட சீன பிரஜைகள் கைது; விசாரணையில் வெளிவந்த உண்மை!

பிரமிட் பண மோசடியில் ஈடுபட்ட சீன பிரஜைகள் கைது; விசாரணையில் வெளிவந்த உண்மை!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

சர்வதேச மட்ட பிரமிட் மோசடியாளர்களான இரண்டு சீன பிரஜைகள் மற்றும் இரண்டு இலங்கையர்களையும் பொரளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நாட்டில் பிரமிட் மோசடி மூலம் சுமார் 4 கோடி ரூபாவை சீன பிரஜைகள் மோசடி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

7 இலட்சம் ரூபா வாடகை அடிப்படையில் பொரளையில் பெறப்பட்ட வீடொன்றில் வசித்து வந்த சீன பிரஜை ஒருவர் , தனது வீடு சிலரால் கொள்ளையிடப்பட்டுள்ளதாக கடந்த 19ஆம் திகதி பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.

வேன், 7 மடிக்கணினிகள் மற்றும் 170 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றுள்ளதாக முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

இது அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது.

கொள்ளையிடப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் 4 கோடி ரூபாய் என அவர் கூறியுள்ளார்.

இதன்படி, கொழும்பு தெற்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்புரையின் பேரில், பொலிஸார் தொலைபேசி தரவுகள் மற்றும் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து மூன்று இலங்கையர்கள் தொடர்பான தகவல்களை கண்டறிந்தனர்.

இதற்கமைய இரண்டு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்ட போது, அவர்களில் குறித்த சீன பிரஜையின் சாரதியும் அடங்குவதாக தெரியவந்துள்ளது.

சீன நாட்டவர் 15 லட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தம் கொடுத்து கொள்ளையடிப்பது போல் நடிக்குமாறு கூறியதாக கைதான இலங்கையர்கள் பொலிசாரிடம் கூறியுள்ளனர்.

பின்னர் அந்த சீன பிரஜையும் அவரது மற்றொரு சீன நண்பரையும் பொலிசார் கைது செய்தனர்.

இந்நிலையில் அவர்களிடம் நடத்திய விசாரணையில், கொழும்பு துறைமுக நகரத்தில் வேலைத்திட்டங்களை மேற்கொள்வதாக கூறி மறைமுகமாக இவர்கள் இருவரும் நாட்டில் பாரியளவில் பிரமிட் மோசடியினை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சுமார் 4 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

இவ்வாறு ஈட்டப்பட்ட கோடிக்கணக்கான பணத்தினை சூதாட்ட விளையாட்டுக்கு சென்று தோற்றுள்ள நிலையில், அதனை மறைப்பதற்காகவே இவ்வாறான போலியான கொள்ளையில் ஈடுபட்டதாக சந்தேகத்திற்குரிய சீன பிரஜைகள் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

பின்னர், பிரமிட் திட்டத்தை மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் சீன பிரஜை வசித்து வந்த கொழும்பு குருந்துவத்தையில் உள்ள வீட்டை பொலிஸார் சோதனையிட்டனர்.

அதற்கு முன்பே அங்கிருந்த 15 சீன பிரஜைகள் சுமார் 40 மடிக்கணினிகளுடன் தப்பிச் சென்றுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சீன பிரஜைகள் சர்வதேச அளவிலான பிரமிட் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் கொள்ளையிட்டதாக கூறப்படும் வேன் உள்ளிட்ட பொருட்களையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு இறக்குமதி செய்த வெளிநாட்டு சிகரெட்டுகளையும் பொலிஸார் இதன்போது கைப்பற்றியுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள், கொழும்பு தெற்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் ஆலோசனையின் பேரில் இடம்பெற்று வருகின்றன.

தொடர்புடையசெய்திகள்

புத்தளத்தில் கணவன் 21 வயது மனைவியைத் தாக்கி கொலை
செய்திகள்

புத்தளத்தில் கணவன் 21 வயது மனைவியைத் தாக்கி கொலை

June 10, 2025
பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் பணிபுரியும் 06 ஊழியர்களுக்கு சிக்குன்குனியா தொற்று
செய்திகள்

பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் பணிபுரியும் 06 ஊழியர்களுக்கு சிக்குன்குனியா தொற்று

June 10, 2025
இஸ்ரேலின் அணுசக்தி இரகசியங்கள் ஈரானின் கைகளில்?
உலக செய்திகள்

இஸ்ரேலின் அணுசக்தி இரகசியங்கள் ஈரானின் கைகளில்?

June 10, 2025
அமெரிக்காவில் மக்கள் சாலைகளில் இறங்கி போராட்டம்
உலக செய்திகள்

அமெரிக்காவில் மக்கள் சாலைகளில் இறங்கி போராட்டம்

June 10, 2025
ஜனாதிபதி இன்று ஜெர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயம்
செய்திகள்

ஜனாதிபதி இன்று ஜெர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயம்

June 10, 2025
போலியாகத் தயாரிக்கப்பட்ட வாசனைத் திரவியங்கள் – நுகர்வோர் விவகார ஆணையகம் சோதனை நடவடிக்கை
செய்திகள்

போலியாகத் தயாரிக்கப்பட்ட வாசனைத் திரவியங்கள் – நுகர்வோர் விவகார ஆணையகம் சோதனை நடவடிக்கை

June 10, 2025
Next Post
நோய்வாய்ப்பட்ட தாய்க்காக வேலையை துறந்த பொலிஸ்!

நோய்வாய்ப்பட்ட தாய்க்காக வேலையை துறந்த பொலிஸ்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.