இஸ்ரேலின் அணுசக்தி அமைப்புகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பான ரகசிய தகவல்கள் ஈரான் உளவுத்துறையால் திருடப்பட்டதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
மேற்கு ஆசிய நாடான ஈரானில் யுரேனியம் பரவலாக காணப்படுகிறது. அணு ஆற்றலுக்கான பயன்பாட்டை மிஞ்சி, அதனை அழிவுசெய்யும் ஆயுதங்களாக மாற்ற ஈரான் நீண்ட காலமாக முயற்சி செய்து வருகிறது. இதற்காக, யுரேனியத்தை செறிவூட்டும் பணிகளில் ஈடுபட்டாலும், இதுவரை வெற்றியடைய முடியவில்லை.

அத்துடன், இஸ்ரேலின் அணுசக்தி அமைப்புகள் மற்றும் முக்கிய அரசியல் திட்டங்களைப் பற்றிய ரகசிய ஆவணங்கள், வீடியோக்கள், புகைப்படங்கள் மற்றும் கணினி தரவுகள் உள்ளிட்டவை ஈரான் உளவுத்துறையால் கைப்பற்றப்பட்டதாக அந்நாட்டின் அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தச் சூழ்நிலையில், இஸ்ரேல் இருவரை ஈரானுக்காக உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டி கைது செய்துள்ளது. இதனை தொடர்ந்து, ஹமாஸ் உள்ளிட்ட அமைப்புகளுக்கு ஈரான் தொடர்ந்து ஆதரவு வழங்கி வரும் நிலையில், இஸ்ரேல் மீது தாக்குதலும் நடத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.