13ஆவது மகளிர் கிரிக்கெட் உலகக் கிண்ணம் இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்துகின்றன. இன்று (29) தொடங்கிய இந்த தொடர் நவம்பர் 2ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்தியா, அவுஸ்திரேலியா (நடப்பு சாம்பியன்), இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்ஆபிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் ஆகிய 8 அணிகள் இதில் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் கட்டத்தைத் தொடர்ந்து முதல்நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
இந்தியாவின் கவுகாத்தி, இந்தூர், விசாகப்பட்டினம், மும்பை மற்றும் இலங்கையின் கொழும்பு நகரங்கள் போட்டி தளங்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

தொடக்கப் போட்டியாக இன்று பிற்பகல் 3.00 மணிக்கு கவுகாத்தியில் இந்தியா–இலங்கை அணிகள் மோதுகின்றன. இதற்கான தயாரிப்பில் இரு அணிகளும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டன.
இந்திய அணியை ஹர்மன்பிரீத் கவுர் வழிநடத்துகிறார். இலங்கை அணியின் கேப்டனாக சமாரி அத்தபத்து உள்ளார்.








