திருக்கோவில் பிரதேசத்தில் காஞ்சிரங்குடா பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் தொடர்ந்து பொதுப் போக்குவரத்து பஸ்களில் ஏற அனுமதிக்கப்படவில்லை என்ற புகாரின் அடிப்படையில், திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் இன்று (23.10.2025) காலை 6.00 மணியளவில் திடீர் கள விஜயம் மேற்கொண்டார்.
மாணவர்கள் கபாடசாலைக்கு செல்ல முடியாமல் கடும் சிரமங்களுக்கு உள்ளாவதாக பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் பிரச்சினை தீர்க்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, தவிசாளர் நேரடியாக சம்பவ இடத்துக்கு சென்று நிலைமையை ஆய்வு செய்து, மாணவர்களுடனும் பஸ் சாரதிகளுடனும் கலந்துரையாடினார். மாணவர்களின் பாதுகாப்பும் கல்வி உரிமையும் உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.
மேலும், பொதுப் போக்குவரத்து சேவைகள் யாரிடமும் பாகுபாடின்றி வழங்கப்பட வேண்டுமெனவும், இத்தகைய சம்பவங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் எனவும், இது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி மாணவர்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கவேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை முன்வைக்கின்றனர்.








