தேசிய விளையாட்டு துறை அமைச்சின் ஊடாக தேசிய இளைஞர் படையணி மற்றும் இளைஞர் சேவை மன்றம் என்பன இணைந்து நடத்தும் இளைஞர் முகாம் வாழச்சேனை தேசிய இளைஞர் படையணி பயிற்சி நிலையத்தில் இன்று வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நிலையப் பொறுப்பதிகாரி டி.சி நிலுகக்ஷி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மௌன இறை வணக்கத்தை தொடர்ந்து தேசிய இளைஞர் கீதம் இசைக்கப்பட்டு சத்திய பிரமாணத்துடன் இன்றைய நிகழ்வுகள் யாவும் இடம்பெற்றது.
தொடர்ந்து 2 நாட்கள் நடைபெறும் குறித்த நிகழ்வில் மாவட்ட ரீதியில் சுமார் 200 இளைஞர் யுவதிகள் பங்கு பற்றுகின்ர்.
தலைமைத்துவ பயிற்சி. திறன் விருத்தி. ஆளுமை மற்றும் விளையாட்டு ஊக்குவிப்பு உள்ளிட்ட இளைஞர் மேம்பாட்டு விடயங்கள் உள்ளிட்டவை தொடர்பான பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது.
நாடளாவிய ரீதியில் 24 இளைஞர் முகாம் நிகழ்வு இது போன்று முன்னெடுக்கப்படுகிறது.
கிழக்கு மாகாண தேசிய இளைஞர் படையணி பணிப்பாளர் மேஜர் நிரஞ்சன் சந்திர திலக. தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் உதவி பணிப்பாளர் திருமதி நிசாந்தி அருள்மொழி ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
அத்துடன் மாவட்ட இளைஞர் சேவைகள் அலுவலர்கள் மா.சசிகுமார்’. திருமதி சதீஸ்வரி .அ.தயாழசீலன் மற்றும் தகவல் நிலைய பொறுப்பதிகாரி எம்.எம்.ரம்சி என இளைஞர் சேவை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

















