போயா தினத்தில் ஏறாவூரில் இருந்து மட்டு நகருக்கு முச்சக்கரவண்டியில் கசிப்பு கடத்திய ஒருவரை 20 போத்தல் கசிப்புடன் கைது
போயா தினத்தில் ஏறாவூரில் இருந்து மட்டக்களப்பு நோக்கி முச்சக்கர வண்டியில் சூட்சமமாக கசிப்பு கடத்திய ஒருவரை கிழக்கு மாகாண குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நேற்று (05) மாலை ஏறாவூர் சவுக்கடி வீதியில் நடைபெற்ற சோதனை நடவடிக்கையின் போது, ஒலிவாங்கி பெட்டிக்குள் (ஸ்பீக்கர் பாக்ஸ்) மறைத்து வைக்கப்பட்டிருந்த 20 லீற்றர் அளவிலான கசிப்பு பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜயசுந்தர அவர்களின் வழிகாட்டலின் பேரில், குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர். மேனன் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போதே இக்கைது இடம்பெற்றது.
கசிப்பு கடத்தியதாகக் கூறப்படும் முச்சக்கரவண்டி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.








