Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கோட்டா கோ ஹோம், ரணில் கம் பெக் மீண்டும் நடைபெறாது; கலாநிதி வசந்த பண்டார தெரிவிப்பு!

கோட்டா கோ ஹோம், ரணில் கம் பெக் மீண்டும் நடைபெறாது; கலாநிதி வசந்த பண்டார தெரிவிப்பு!

2 years ago
in செய்திகள்

இலங்கையில் 2ஆவது மக்கள் போராட்டம் நிச்சயம் வெடிக்கும். இந்த போராட்டம் பயங்கரமானதாக இருக்கும். இதன் பின்னணியிலும் அமெரிக்காவே இருக்கும் – என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் செயலாளர் கலாநிதி வசந்த பண்டார.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்-கோட்டா கோ ஹோம், ரணில் கம் பெக் என்பதே முதலாவது போராட்டத்தின் இலக்காக இருந்தது. இதில் கோட்டா கோ ஹோம் என்பது மட்டுமே வெளியில் தெரிந்தது. ரணில் கம் பெக் என்பது திரைமறைவில் இடம்பெற்றுவந்தது.

2ஆவது போராட்டம் ரணில் கோ ஹோம் என வராது, அது வேறு வடிவில் வரும். அதாவது, ரணில் ஆட்சியில் இரும்கும் போது வர்க்க வேறுபாட்டால் ஏற்படும் போராட்டமாக அது அமையும். பட்டினி, வேலையின்மை உள்ளிட்டவற்றால் மக்கள் வீதியில் இறங்கக்கூடும். மக்கள் உணவுகளை கொள்ளையடிக்கலாம், சுப்பர் மார்க்கெட்டுகள் உடைக்கப்பட்டு பொருட்கள் களவாடப்படலாம். செல்வந்தர்களின் சொத்துகள் சூறையாடப்படலாம்.உணவை எப்படி பதுக்குவது, அதன்மூலம் எப்படி போராட்டத்தை ஏற்படுத்துவதென்பது
எல்லாம் சிஐஏ புத்தகத்தில் உள்ளது. விக்டோரியா நூலண்டால் (அமெரிக்க இராஜதந்திரி) இயக்கப்படும் போராட்டத்தின் 2ஆவது பாகமாகவே இது இருக்கும்.

முதலாவது போராட்டத்தில் ஜனாதிபதியை கொலை செய்து விட்டு லிபியாவில்போன்று, சர்வதேச தலையீட்டுடன் இடைக்கால ஆட்சியை ஏற்படுத்த முயற்சிக்கப்பட்டது. அது சரிவரவில்லை. அதனால்தான்
தற்போது பிளேன் ‘பீ’ வருகின்றது.

முதலாவது போராட்டத்தின் போது இருப்பவர்கள் வீதிக்கு வந்தனர். 2ஆவது போராட்டத்தில் விவசாயிகள், வேலை இழந் தவர்கள் என பலரும் வருவார்கள்.முதலாவது போராட்டத்தின் போதும் பொன்சேகாவின் பங் களிப்பு இருந்தது. அவர் மட்டுமே போராட்ட களத்துக்கு செல்லக்கூடியதாக இருந்தது. அமெரிக்க, தூதுவருக்கும் பொன்சேகாவுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு உள்ளது. அவர் அமெரிக்காவின் கைப்பா
வையாக மாறியுள்ளார். 2010 ஜனாதிபதித் தேர்தலில் பொன் சேகாவுக்கு வடக்கில் எப்படி 100 வீத வாக்குகள் கிடைக்கப் பெற்றன. லிபியாவில் இடைக் கால அரசு அமைந்தபோது இராணுவத் தளபதிகள் உள்வாங்கப்பட்டனர். இலங்கையில் அவ் வாறு நடந்திருந்தால் பொன்சே காவும் இடைக்கால அரசியல்
இருந்திருப்பார். 2ஆவது போராட்டத்துக்கும் பொன்சேகா பயன்படுத்தப்படலாம்.

எதிர்வரும் நவம்பர் மாதமளவில் உணவு நெருக்கடி ஏற்படும். நீர் இல்லை. வயல் நிலங்கள்
அழிவடைந்துள்ளன. இவ்வாறானதொரு நிலைமை ஏற்படாதிருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பில் மக்கள் உட்பட அனைத்து தரப்பினரும் விழிப்பாக இருக்க வேண்டும்-என்றார்.

தொடர்புடையசெய்திகள்

கைதுசெய்யப்படப்போகும் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச?
செய்திகள்

கைதுசெய்யப்படப்போகும் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச?

June 8, 2025
காத்தான்குடியில் நேற்று போக்குவரத்து சட்டங்களை மீறி பயணித்த 55 பேருக்கு எதிராக வழக்கு
செய்திகள்

காத்தான்குடியில் நேற்று போக்குவரத்து சட்டங்களை மீறி பயணித்த 55 பேருக்கு எதிராக வழக்கு

June 8, 2025
யாழில் ஆசிரியர் தண்டித்ததால் கிருமி நாசினியை அருந்திய பாடசாலை மாணவன்
செய்திகள்

யாழில் ஆசிரியர் தண்டித்ததால் கிருமி நாசினியை அருந்திய பாடசாலை மாணவன்

June 8, 2025
ஆண்களுக்கு 50 யுவான் வழங்கி கட்டிப்பிடி வைத்தியத்தினூடாக மன அழுத்தத்தை போக்கும் சீன பெண்கள்
உலக செய்திகள்

ஆண்களுக்கு 50 யுவான் வழங்கி கட்டிப்பிடி வைத்தியத்தினூடாக மன அழுத்தத்தை போக்கும் சீன பெண்கள்

June 8, 2025
ஜனாதிபதி செய்தாரா? மக்கள் யாரை நம்புவது? அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும்!; நிசாம் காரியப்பர்
செய்திகள்

ஜனாதிபதி செய்தாரா? மக்கள் யாரை நம்புவது? அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும்!; நிசாம் காரியப்பர்

June 8, 2025
சம்மாந்துறையில் போக்குவரத்து சட்டங்களை மீறி பயணித்த மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
செய்திகள்

சம்மாந்துறையில் போக்குவரத்து சட்டங்களை மீறி பயணித்த மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

June 7, 2025
Next Post
மழை வேண்டி ஓட்டமாவடியில் தொழுகை!

மழை வேண்டி ஓட்டமாவடியில் தொழுகை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.