மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்துவரும் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனையை தடுக்கும் முகமாக சந்திவெளி பொலிசார் மற்றும் பிரதேச இளைஞர்கள் இணைந்து சுற்றி வளைப்பு நடவடிக்கையில் இன்று (14) ஈடுபட்டிருந்தனர்.
சந்திவெளி பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட சித்தாண்டி சந்தனமடு பகுதி அண்மித்த இடங்களில் இடம்பெற்ற சுற்றி வளைப்பு தேடுதலில் 80 லீற்றர் கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படும் 2 தகர வரல்கள் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டது. இதன்போது சந்தேக நபர்கள் தப்பியோடியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
சித்தாண்டி சமூகமட்ட இளைஞர்கள் மற்றும் சந்திவெளி பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் இணைந்து குறித்த சுற்றிவளைப்பை மேற்கொண்டிருந்தனர்.
அண்மைக் காலமாக மாவடிவேம்பு உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக சட்டவிரோத கசிப்பு விற்பனை மற்றும் உற்பத்தி இடங்களை தேடி சந்திவெளி மற்றும் ஏறாவூர் பொலிசார் இணைந்து சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றுவருகின்றது.
சுற்றி வளைப்பில் கைப்பற்றபட்ட கசிப்பு மற்றும் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் பொருட்களை நீதிமன்றுக்கு சமர்ப்பிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சந்திவெளி பொலிசார் தெரிவித்தனர்.
தொடர்ச்சியாக சித்தாண்டிஇ மாவடிவேம்பு, ஈரளக்குளம் உள்ளிட்ட கிராமசேவகர் பிரிவுகளில் இடம்பெறும் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனை இடங்களைத்தேடி இடம்பெறும் சுற்றிவலைப்பு இடம்பெறுமென பொலிசார் தெரிவித்தனர்.









