மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர் உணவு பொருட்களை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் இன்று (06) வழங்கி வைத்தார்.
இவருடன் கோறளைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எஸ் சுதாகரன் பிரதி தவிசாளர் கே.பத்மநீதன் ஆகியோரும் உடன் சமூகமளித்திருந்தனர்.
கிரான் பிரதேசத்தின் சந்திவெளி வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவின் மீராவோடை போன்ற கிராமங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்டதுடன் அவர்களது வாழ்வாதாரம் தொடர்பாக கலந்துரையாடலை மேற்கொண்டு உலர் உணவுப் பொதிகளையும் வழங்கி வைத்தார்.













