Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
36 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் ஏவப்பட்டது எல்.வி.எம்-03 ரொக்கெட்!

36 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் ஏவப்பட்டது எல்.வி.எம்-03 ரொக்கெட்!

3 years ago
in தொழில்நுட்பம்

பிரித்தானியாவின் ஒன்வெப் ( OneWeb’s) செயற்கைக்கோள் நிறுவனத்தின் எல்.வி.எம்-3 ரொக்கெட், 36 செயற்கைக்கோள்களுடன் இந்தியாவிலிருந்து ஒரே நேரத்தில் ஏவப்பட்டதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையமான இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த ரொக்கெட் இன்றைய தினம் (26.03.2023) ஏவப்பட்டதாகவும் இந்த முயற்சி இந்தியாவுக்கு ஒரு மைல்கல் என்றும் இஸ்ரோ குறிப்பிட்டுள்ளது.

புவியின் தாழ் வட்டப்பாதையில் ஏவப்படும் (LEO) செயற்கைக்கோள்களைத் தயாரிக்கும் நிறுவனமான ‘ஒன்வெப்’, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) மற்றும் இந்திய விண்வெளித்துறையின் வணிகப்பிரிவான ‘நியூ ஸ்பேஸ் இந்தியா நிறுவனம்’ (என்.எஸ்.ஐஎல்) ஆகியவை இணைந்து வணிக ரீதியிலான செயற்கைக்கோள்களை ஏவுவது தொடர்பாக இரண்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.

அதன்படி, இஸ்ரோவின் அதிக எடைகொண்ட ரொக்கெட்டான எல்.வி.எம்.3 மூலம் ஒன்வெப் நிறுவனத்தின் செயற்கைக்கோள்கள் விண்வெளிக்குக் கொண்டு செல்லப்படும். முதலில் ‘ஜிஎஸ்எல்வி எம்.கே-3’ என்று இந்த ரொக்கெட்டுக்கு பெயர் இருந்த நிலையில், பின்னர் அது ‘எல்.வி.எம்-3’ என்று பெயர் மாற்றம் பெற்றது.

இந்நிலையில், 2ஆவது கட்டமாக இந்தியாவின் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2ஆவது ஏவுதளத்திலிருந்து ஜிஎஸ்எல்வி மார்க்-3 ரொக்கெட் மூலம் 36 செயற்கைக்கோள்கள் இன்றைய தினம் காலை 9 மணி அளவில் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கான கவுன்ட்-டவுன் நேற்றைய தினம் காலை 8.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த 36 செயற்கைக்கோள்களின் மொத்த எடை 5,805 கிலோ.

இவை அனைத்தும் பூமியிலிருந்து சுமார் 450 கி.மீ. தொலைவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் இந்த செயற்கைக்கோள்கள் பகுதி பகுதியாக லொஞ்சரிலிருந்து பிரிந்து அதன் வட்டப் பாதையை அடைந்தன எனவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

பார்வையற்றோருக்காக செயற்கை நுண்ணறிவு ரோபோ வழிகாட்டி நாயை உருவாக்கும் இலங்கை விஞ்ஞானி!
உலக செய்திகள்

பார்வையற்றோருக்காக செயற்கை நுண்ணறிவு ரோபோ வழிகாட்டி நாயை உருவாக்கும் இலங்கை விஞ்ஞானி!

May 29, 2026
இலங்கையில் கைத்தொலைபேசி விலைகள் 25% வரை அதிகரிக்கும் நிலை
செய்திகள்

இலங்கையில் கைத்தொலைபேசி விலைகள் 25% வரை அதிகரிக்கும் நிலை

May 21, 2026
அக்கரைப்பற்றில் காரை செலுத்தி இருவரை மோதித்தள்ளிய சிறுவர்கள்
காணொளிகள்

அக்கரைப்பற்றில் காரை செலுத்தி இருவரை மோதித்தள்ளிய சிறுவர்கள்

May 21, 2026
பல புதிய அம்சங்களுடன் விரைவில் அறிமுகமாகும் ‘ஜெமினி ஸ்பார்க்’ AI உதவியாளர்!
செய்திகள்

பல புதிய அம்சங்களுடன் விரைவில் அறிமுகமாகும் ‘ஜெமினி ஸ்பார்க்’ AI உதவியாளர்!

May 21, 2026
தாய்லாந்தில் 120 மில்லியன் ஆண்டுகள் பழமையான புதிய இராட்சத டைனோசர் இனம் கண்டுபிடிப்பு!
உலக செய்திகள்

தாய்லாந்தில் 120 மில்லியன் ஆண்டுகள் பழமையான புதிய இராட்சத டைனோசர் இனம் கண்டுபிடிப்பு!

May 15, 2026
கூகுள் நிறுவனம் “கூகுள் புக்” என்ற புதிய வகை மடிக்கணினிகளை அறிமுகப்படுத்தியுள்ளது
செய்திகள்

கூகுள் நிறுவனம் “கூகுள் புக்” என்ற புதிய வகை மடிக்கணினிகளை அறிமுகப்படுத்தியுள்ளது

May 13, 2026
Next Post
நாளை விலை குறைகிறது!

நாளை விலை குறைகிறது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.