Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
36 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் ஏவப்பட்டது எல்.வி.எம்-03 ரொக்கெட்!

36 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் ஏவப்பட்டது எல்.வி.எம்-03 ரொக்கெட்!

2 years ago
in தொழில்நுட்பம்

பிரித்தானியாவின் ஒன்வெப் ( OneWeb’s) செயற்கைக்கோள் நிறுவனத்தின் எல்.வி.எம்-3 ரொக்கெட், 36 செயற்கைக்கோள்களுடன் இந்தியாவிலிருந்து ஒரே நேரத்தில் ஏவப்பட்டதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையமான இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த ரொக்கெட் இன்றைய தினம் (26.03.2023) ஏவப்பட்டதாகவும் இந்த முயற்சி இந்தியாவுக்கு ஒரு மைல்கல் என்றும் இஸ்ரோ குறிப்பிட்டுள்ளது.

புவியின் தாழ் வட்டப்பாதையில் ஏவப்படும் (LEO) செயற்கைக்கோள்களைத் தயாரிக்கும் நிறுவனமான ‘ஒன்வெப்’, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) மற்றும் இந்திய விண்வெளித்துறையின் வணிகப்பிரிவான ‘நியூ ஸ்பேஸ் இந்தியா நிறுவனம்’ (என்.எஸ்.ஐஎல்) ஆகியவை இணைந்து வணிக ரீதியிலான செயற்கைக்கோள்களை ஏவுவது தொடர்பாக இரண்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.

அதன்படி, இஸ்ரோவின் அதிக எடைகொண்ட ரொக்கெட்டான எல்.வி.எம்.3 மூலம் ஒன்வெப் நிறுவனத்தின் செயற்கைக்கோள்கள் விண்வெளிக்குக் கொண்டு செல்லப்படும். முதலில் ‘ஜிஎஸ்எல்வி எம்.கே-3’ என்று இந்த ரொக்கெட்டுக்கு பெயர் இருந்த நிலையில், பின்னர் அது ‘எல்.வி.எம்-3’ என்று பெயர் மாற்றம் பெற்றது.

இந்நிலையில், 2ஆவது கட்டமாக இந்தியாவின் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2ஆவது ஏவுதளத்திலிருந்து ஜிஎஸ்எல்வி மார்க்-3 ரொக்கெட் மூலம் 36 செயற்கைக்கோள்கள் இன்றைய தினம் காலை 9 மணி அளவில் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கான கவுன்ட்-டவுன் நேற்றைய தினம் காலை 8.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த 36 செயற்கைக்கோள்களின் மொத்த எடை 5,805 கிலோ.

இவை அனைத்தும் பூமியிலிருந்து சுமார் 450 கி.மீ. தொலைவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் இந்த செயற்கைக்கோள்கள் பகுதி பகுதியாக லொஞ்சரிலிருந்து பிரிந்து அதன் வட்டப் பாதையை அடைந்தன எனவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

புவி கண்காணிப்புக்காக இஸ்ரோ ஏவிய இஓஎஸ்-09 செயற்கைக்கோள் தோல்வி
உலக செய்திகள்

புவி கண்காணிப்புக்காக இஸ்ரோ ஏவிய இஓஎஸ்-09 செயற்கைக்கோள் தோல்வி

May 18, 2025
காஸா போரில் இஸ்ரேல் இராணுவத்துக்கு ஏஐ மூலம் உதவியதாக மைக்ரோசொப்ட் நிறுவனம் ஒப்புக்கொண்டது
உலக செய்திகள்

காஸா போரில் இஸ்ரேல் இராணுவத்துக்கு ஏஐ மூலம் உதவியதாக மைக்ரோசொப்ட் நிறுவனம் ஒப்புக்கொண்டது

May 18, 2025
ஐபோன்களில் இடைநிறுத்தப்படவுள்ள வாட்ஸ்அப்
செய்திகள்

ஐபோன்களில் இடைநிறுத்தப்படவுள்ள வாட்ஸ்அப்

May 1, 2025
வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அப்டேட்
செய்திகள்

வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அப்டேட்

April 24, 2025
சீனாவில் இயந்திர மனிதா்கள் பங்கேற்ற முதல் மரத்தான் ஓட்டப் போட்டி
உலக செய்திகள்

சீனாவில் இயந்திர மனிதா்கள் பங்கேற்ற முதல் மரத்தான் ஓட்டப் போட்டி

April 20, 2025
ஏவுகணைகளை அழிக்கும் இந்தியாவின் லேசர் தொழில்நுட்பம்
உலக செய்திகள்

ஏவுகணைகளை அழிக்கும் இந்தியாவின் லேசர் தொழில்நுட்பம்

April 18, 2025
Next Post
நாளை விலை குறைகிறது!

நாளை விலை குறைகிறது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.