Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உதயகலா கூறியதற்கு மன்னிப்பு கேட்கவேண்டும்;மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்!

உதயகலா கூறியதற்கு மன்னிப்பு கேட்கவேண்டும்;மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்!

3 years ago
in மட்டு செய்திகள்

உண்ணாவிரதம் மேற்கொண்டு அண்மையில் சிறைச்சாலையில் இருந்து விடுதலையான உதயகலா எனும் பெண்மணி வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பில் தெரிவித்த கருத்துக்களுக்கு, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தமது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.

இவ்வாறு, இன்றையதினம் மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர்கள் தமது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.\மேலும் அவர்கள்,

“வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அனைவரும் இறுதி யுத்தத்தில் இறந்து விட்டதாகவும், அவர்கள் அனைவரும் முன்னாள் போராளிகள் எனவும் அப்பட்டமான ஒரு பொய்யை உதயகலா கூறி இருக்கின்றார்.

வடக்கில் யுத்தம் நடந்த போது, அங்கு இருந்தவர்கள் அனைவரும் விடுதலைப்புலிகள் அல்ல, 75 வீதத்திற்கும் மேல் மக்களே இருந்தனர்.

அந்த பொதுமக்களில் பலர் இன்று காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்றார்கள்.

ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் யுத்தத்தில் சரணடைந்தனர், அவர்களில் முக்கால்வாசி பேர் பொதுமக்களே.

சரணடைந்த மற்றும் இராணுவத்தால் இழுத்து செல்லப்பட்ட எமது பிள்ளைகள், எமது மக்கள், எமது பெண்கள் எங்கே எனக் கேட்டு நிற்கிறோம்.

எங்களது உறவுகளை தொலைத்து நிற்கின்ற வலியை பற்றி இந்த உதயகலாவிற்கு என்ன தெரியும்.

தமிழ் மக்கள் காணாமல் ஆக்கப்பட்டதையும், அழிக்கப்பட்டதையும் சர்வதேசமே இன்று கூறுகிறது, ஜெனிவாவில் அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

உதயகலாவின் கருத்துக்களுக்கு அனைத்து மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சார்பில் எமது கடுமையான கண்டனத்தை தெரிவிக்கிறோம்.

அவர் தெரிவித்த அப்பட்டமான பொய்களுக்கு உடனடியாக அனைத்து மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்.” இவ்வாறு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தமது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் போலி தங்க ஆபரணங்களை வடிவமைத்து மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாகி வந்தவர் 9 மாதங்களின் பின்னர் கைது
செய்திகள்

மட்டக்களப்பில் போலி தங்க ஆபரணங்களை வடிவமைத்து மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாகி வந்தவர் 9 மாதங்களின் பின்னர் கைது

June 5, 2026
வாகரை பிரதேசத்தின் கடற்கரை பகுதிகள் சுத்தப்படுத்தும் நிகழ்வு
செய்திகள்

வாகரை பிரதேசத்தின் கடற்கரை பகுதிகள் சுத்தப்படுத்தும் நிகழ்வு

June 4, 2026
கிழக்குப்பல்கலைக் கழகத்தின் நுண்கலைத்துறை நடத்திய நாடக விழா
காணொளிகள்

கிழக்குப்பல்கலைக் கழகத்தின் நுண்கலைத்துறை நடத்திய நாடக விழா

June 4, 2026
மட்டு புதுர் விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்கள் மாகாண மட்ட போட்டியில் சாதனை
காணொளிகள்

மட்டு புதுர் விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்கள் மாகாண மட்ட போட்டியில் சாதனை

June 4, 2026
காத்தான்குடிக்கு ஜனாதிபதி எம்.எல்.ஏ.ம் ஹிஸ்புல்லாவா?; காத்தான்குடி நகரசபையின் செயற்பாடுகளில் அதிருப்தி அடைந்துள்ள உறுப்பினர்கள்
அரசியல்

காத்தான்குடிக்கு ஜனாதிபதி எம்.எல்.ஏ.ம் ஹிஸ்புல்லாவா?; காத்தான்குடி நகரசபையின் செயற்பாடுகளில் அதிருப்தி அடைந்துள்ள உறுப்பினர்கள்

June 4, 2026
மட்டக்களப்பு பாலமுனையில் மரத்திலிருந்து விழுந்து 34 வயது நபர் உயிரிழப்பு!
காணொளிகள்

மட்டக்களப்பு பாலமுனையில் மரத்திலிருந்து விழுந்து 34 வயது நபர் உயிரிழப்பு!

June 4, 2026
Next Post
மட்டக்களப்பு காந்தி பூங்காவில் பெண் ஒருவரின் சடலம்!

மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இருந்த பெண்ணின் சடலம்! ( காணொளி )

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.