Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
களுவாஞ்சிகுடி முச்சக்கர வண்டி சாரதிகள் பிரதேச சபைக்கு முன்னால் போராட்டம்!

களுவாஞ்சிகுடி முச்சக்கர வண்டி சாரதிகள் பிரதேச சபைக்கு முன்னால் போராட்டம்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மாவட்ட களுவாஞ்சிகுடி காவல்துறை பிரிவுக்குட்பட்ட களுவாஞ்சிகுடி முச்சக்கர வண்டி சாரதிகளால் போராட்டமொன்று முன்னெடுக்கபட்டது. இன்று (04.10.2023) காலை களுதாவளையில் அமைந்துள்ள மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் முன்னால் தமது முச்சக்கர வண்டிகளை நிறுத்தி பதாகைகளை ஏந்தியவாறு பிரதேச சபையின் வாயிற் கதவை வழிமறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்பிரதேசத்திலேயே இருந்து கொண்டு பிரதேச சபைக்கு வரியைச் செலுத்திக் கொண்டு தமது வாழ்வாதாரத்தை மேற்கொண்டு வரும் தமக்கு வெளி பிரதேசங்களிலிருந்து வரும் முச்சக்கர வண்டிகளால் பெரும் நட்டத்தை எதிர்கொள்வதாகவும், இதனால் தமது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படுவதாகவும், ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் அவர்கள் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் செயலாளர் உடன் கவனத்தில் எடுக்க வேண்டும், எமக்குரிய தீர்வை பெற்றுத்தா, மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவர் உங்கள் கவனத்திற்கு, கிழக்கு மகாண ஆளுநரின் கவனத்திற்கு, உள்ளிட்ட வாசகங்களை எழுத்தியிருந்த பதாகைகளையும் அவர்கள் ஏந்தியிருந்தனர்.

பின்னர் ஆர்ப்பாட்ட காரர்களில் 4 பேரை பிரதேச சபையின் செயலாளர் சா.அறிவழகன் அவரது காரியாலயத்தினுள் அழைத்ததோடு, கடமையிலிருந்த களுவாஞ்சிகுடி காவல் நிலைய பொறுப்பதிகாரி ரி.அபயவிக்கிரமவையும் அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதன்போது அனைத்து முச்சக்கர வண்டிகளுக்கும் ரெக்ஸ் வோட் பொருத்துதல், ஒற்றை நாட்கள். இரட்டை நாட்கள் என மாறி மாறி முச்சக்கர வண்டிகளை உரிய இடங்களில் தரித்து நிற்கச் செய்தல், பிரதேச சபையினால் முச்சக்கர வண்டிகளுக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்ரிக்கர்களை ஒட்டுதல், மாதம் ஒருமுறை காவல்துறையுடன் முச்சக்கர வண்டி சாரதிகள் சந்திப்பை ஏற்படுத்தல், இதனை காவல்துறை, பிரதேச சபையயும், முச்சக்கர வண்டி சாரதிகளும் இணைந்து மேற்கொள்ளுதல் போன்ற தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. அதன் பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

தொடர்புடையசெய்திகள்

போலியாகத் தயாரிக்கப்பட்ட வாசனைத் திரவியங்கள் – நுகர்வோர் விவகார ஆணையகம் சோதனை நடவடிக்கை
செய்திகள்

போலியாகத் தயாரிக்கப்பட்ட வாசனைத் திரவியங்கள் – நுகர்வோர் விவகார ஆணையகம் சோதனை நடவடிக்கை

June 10, 2025
கம்பஹாவில் நாளை 10 மணிநேர நீர் வெட்டு
செய்திகள்

கம்பஹாவில் நாளை 10 மணிநேர நீர் வெட்டு

June 10, 2025
பிரேசில் கால்பந்து வீரருக்கு கோவிட் தொற்று உறுதி
உலக செய்திகள்

பிரேசில் கால்பந்து வீரருக்கு கோவிட் தொற்று உறுதி

June 10, 2025
யாழில் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ள திமிங்கிலம்
செய்திகள்

யாழில் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ள திமிங்கிலம்

June 9, 2025
கண்டியைச் சேர்ந்த ஐவர் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம்
செய்திகள்

கண்டியைச் சேர்ந்த ஐவர் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம்

June 9, 2025
நேற்று முதல் இன்று வரை 479 ட்ரோன்கள் மூலம் உக்ரைன் மீது ரஷ்யா தொடர் தாக்குதல்
உலக செய்திகள்

நேற்று முதல் இன்று வரை 479 ட்ரோன்கள் மூலம் உக்ரைன் மீது ரஷ்யா தொடர் தாக்குதல்

June 9, 2025
Next Post
அவுஸ்திரேலியாவுக்கு எதிராக வழக்கு தொடரும் தனுஷ்க குணதிலக!

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக வழக்கு தொடரும் தனுஷ்க குணதிலக!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.