Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
களுவாஞ்சிகுடி முச்சக்கர வண்டி சாரதிகள் பிரதேச சபைக்கு முன்னால் போராட்டம்!

களுவாஞ்சிகுடி முச்சக்கர வண்டி சாரதிகள் பிரதேச சபைக்கு முன்னால் போராட்டம்!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மாவட்ட களுவாஞ்சிகுடி காவல்துறை பிரிவுக்குட்பட்ட களுவாஞ்சிகுடி முச்சக்கர வண்டி சாரதிகளால் போராட்டமொன்று முன்னெடுக்கபட்டது. இன்று (04.10.2023) காலை களுதாவளையில் அமைந்துள்ள மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் முன்னால் தமது முச்சக்கர வண்டிகளை நிறுத்தி பதாகைகளை ஏந்தியவாறு பிரதேச சபையின் வாயிற் கதவை வழிமறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்பிரதேசத்திலேயே இருந்து கொண்டு பிரதேச சபைக்கு வரியைச் செலுத்திக் கொண்டு தமது வாழ்வாதாரத்தை மேற்கொண்டு வரும் தமக்கு வெளி பிரதேசங்களிலிருந்து வரும் முச்சக்கர வண்டிகளால் பெரும் நட்டத்தை எதிர்கொள்வதாகவும், இதனால் தமது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படுவதாகவும், ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் அவர்கள் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் செயலாளர் உடன் கவனத்தில் எடுக்க வேண்டும், எமக்குரிய தீர்வை பெற்றுத்தா, மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவர் உங்கள் கவனத்திற்கு, கிழக்கு மகாண ஆளுநரின் கவனத்திற்கு, உள்ளிட்ட வாசகங்களை எழுத்தியிருந்த பதாகைகளையும் அவர்கள் ஏந்தியிருந்தனர்.

பின்னர் ஆர்ப்பாட்ட காரர்களில் 4 பேரை பிரதேச சபையின் செயலாளர் சா.அறிவழகன் அவரது காரியாலயத்தினுள் அழைத்ததோடு, கடமையிலிருந்த களுவாஞ்சிகுடி காவல் நிலைய பொறுப்பதிகாரி ரி.அபயவிக்கிரமவையும் அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதன்போது அனைத்து முச்சக்கர வண்டிகளுக்கும் ரெக்ஸ் வோட் பொருத்துதல், ஒற்றை நாட்கள். இரட்டை நாட்கள் என மாறி மாறி முச்சக்கர வண்டிகளை உரிய இடங்களில் தரித்து நிற்கச் செய்தல், பிரதேச சபையினால் முச்சக்கர வண்டிகளுக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்ரிக்கர்களை ஒட்டுதல், மாதம் ஒருமுறை காவல்துறையுடன் முச்சக்கர வண்டி சாரதிகள் சந்திப்பை ஏற்படுத்தல், இதனை காவல்துறை, பிரதேச சபையயும், முச்சக்கர வண்டி சாரதிகளும் இணைந்து மேற்கொள்ளுதல் போன்ற தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. அதன் பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

தொடர்புடையசெய்திகள்

மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; 5 பேர் காயம்!
செய்திகள்

மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; 5 பேர் காயம்!

September 15, 2026
மதுபானம் வாங்கிக் கொடுக்கவில்லை; அனுராதபுர கூட்டம் குறித்து சாகர காரியவசம் விளக்கம்!
அரசியல்

மதுபானம் வாங்கிக் கொடுக்கவில்லை; அனுராதபுர கூட்டம் குறித்து சாகர காரியவசம் விளக்கம்!

September 15, 2026
கொழும்பு உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!
செய்திகள்

கொழும்பு உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

September 15, 2026
லண்டனில் தமிழ்நாட்டிற்கு ரூ.11,000 கோடி முதலீடு; 7,000 வேலைவாய்ப்பு உருவாக்கம்!
உலக செய்திகள்

லண்டனில் தமிழ்நாட்டிற்கு ரூ.11,000 கோடி முதலீடு; 7,000 வேலைவாய்ப்பு உருவாக்கம்!

September 15, 2026
மட்டக்களப்பு களுதாவளை பிள்ளையார் ஆலயத்தில் மெய்சிலிர்க்க வைத்த சம்பவம்!
செய்திகள்

மட்டக்களப்பு களுதாவளை பிள்ளையார் ஆலயத்தில் மெய்சிலிர்க்க வைத்த சம்பவம்!

September 15, 2026
உலக அல்டிமேட் செம்பியன் பட்டம் வென்ற ருமேஷ் தரங்க நாடு திரும்பினார்!
செய்திகள்

உலக அல்டிமேட் செம்பியன் பட்டம் வென்ற ருமேஷ் தரங்க நாடு திரும்பினார்!

September 15, 2026
Next Post
அவுஸ்திரேலியாவுக்கு எதிராக வழக்கு தொடரும் தனுஷ்க குணதிலக!

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக வழக்கு தொடரும் தனுஷ்க குணதிலக!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.