ரஷ்யா நேற்றிரவு (8) முதல் இன்று (09) காலை வரை ட்ரோன்கள் மூலம் தொடர் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது.
479 ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்திய நிலையில், 20-க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான ஏவுகணைகள் மூலம் உக்ரைனின் பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவித்துள்ளது.
இரவு நேரங்களில் ட்ரோன்களை கண்டுபிடித்து அழிப்பது சிரமம் என்பதால், மாலை நேரத்தில் இருந்து காலை வரை ட்ரோன் தாக்குதலை நடத்துவதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது.

ஷாஹேத் வகை ட்ரோன்கள் மூலம் மக்கள் வசிக்கும் இடங்களை குறிவைத்து ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்திய வருகிறது. கடந்த 3 வருடத்திற்கு மேலாக ரஷ்யா நடத்திய தாக்குதலில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உக்ரைன் மக்கள் உயிரிழந்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் ரஷ்ய விமானப்படை தளத்தை குறிவைத்து உக்ரைன் சரமாரி ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இதில் 40-க்கும் மேற்பட்ட ரஷ்ய விமானங்கள் அழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதில் இருந்து ரஷ்யா தாக்குதலை அதிகரித்துள்ளது.
இதற்கிடையே ரஷ்யா- உக்ரைன் இடையே நேரடி அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறமையும் குறிப்பிடத்தக்கது.