Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உள்ளகப் பொறிமுறையில் தமிழர்களுக்கு நீதி கிடைக்க சாத்தியமில்லை; நீதிபதி ரி.சரவணராஜாவின் விவகாரம் மூலம் நிரூபணம் – சி.வி.கே.சிவஞானம்!

உள்ளகப் பொறிமுறையில் தமிழர்களுக்கு நீதி கிடைக்க சாத்தியமில்லை; நீதிபதி ரி.சரவணராஜாவின் விவகாரம் மூலம் நிரூபணம் – சி.வி.கே.சிவஞானம்!

2 years ago
in செய்திகள்

உள்ளக பொறிமுறையில் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு நீதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு தவறானது என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜாக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு கண்டனத்தை வெளிப்படுத்தும் வகையில் தமிழ் தேசிய கட்சிகளினால் இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டிருந்த மனித சங்கிலி போராட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த காலங்களில் பல நீதிபதிகளுக்கு உயிர் அச்சுறுத்தல்கள் காணப்பட்ட போதும் நீதிபதி ரி. சரவணராஜா அவர்களே அதை வெளிப்படுத்தியுள்ளார்.

அரசியல் தலையீடு மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களினுடைய நேரடி அச்சறுத்தல் காரணமாக நீதித்துறை அதிகாரி ஒருவர் தன்னுடைய கடமையை செய்வதை தடுத்து அவரை அச்சுறுத்தியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் தேசிய இனம் சார்ந்து ஒற்றுமையாக இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ளார்.

இந்த நாடும், அரசாங்கமும் எங்களுடைய உணர்வுகளை புரிந்து கொண்டு நீதி துறையை சுயமாக இயங்க அனுமதிக்க வேண்டும் . அதை சர்வதேசம் உறுதிபடுத்த வேண்டும் என்ற மக்களின் உணர்வுகளை இந்த ஆர்ப்பாட்டம் வலியுறுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னரும் பல நீதிபதிகளுக்கு அரசியல்வாதிகளிடமிருந்து அச்சுறுத்தல்கள் இருந்தாலுமே அவை வெளிப்படையாக இருந்ததில்லை என்றும் அச்சுறுத்தலுக்கு மேலாக மன அழுத்தம் உருவாகி ஒரு நீதிபதி நாட்டை விட்டு வெளியேறுகின்ற சூழ்நிலை இதற்கு முன்னர் காணப்பட்ட போதும் தற்போது ரி. சரவணராஜா அவர்களே அதை வெளிப்படையாக செய்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

” ஏற்கனவே உள்ளக பொறிமுறையில் நம்பிக்கை இல்லை என்பதை தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்ற நிலையில் இப்பொழுது அது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் உள்ளக பொறிமுறையின் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு தவறானதோடு அது சாத்தியமற்றது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

ரணில் விக்கிரமசிங்க மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி சந்திப்பு
அரசியல்

ரணில் விக்கிரமசிங்க மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி சந்திப்பு

June 10, 2025
மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளராக தினகரன் ரவி நியமனம்
செய்திகள்

மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளராக தினகரன் ரவி நியமனம்

June 10, 2025
திருகோணமலை கல்வி வலயத்தின் புதிய வலய கல்விப் பணிப்பாளராக காரைதீவைச் சேர்ந்த செல்லத்துரை புவனேந்திரன் நியமனம்
செய்திகள்

திருகோணமலை கல்வி வலயத்தின் புதிய வலய கல்விப் பணிப்பாளராக காரைதீவைச் சேர்ந்த செல்லத்துரை புவனேந்திரன் நியமனம்

June 10, 2025
மண்டைதீவு கடலில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி
செய்திகள்

மண்டைதீவு கடலில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி

June 10, 2025
நேபாளத்தில் முதல் தாய்ப்பால் வங்கி திறப்பு
உலக செய்திகள்

நேபாளத்தில் முதல் தாய்ப்பால் வங்கி திறப்பு

June 10, 2025
240 பில்லியனை மதுபானங்களிலிருந்தும் 2 பில்லியனை பீடியிலிருந்தும் வருமானஈட்ட மதுவரித் திணைக்களம் எதிர்பார்ப்பு
செய்திகள்

240 பில்லியனை மதுபானங்களிலிருந்தும் 2 பில்லியனை பீடியிலிருந்தும் வருமானஈட்ட மதுவரித் திணைக்களம் எதிர்பார்ப்பு

June 10, 2025
Next Post
ETF – EPF தொடர்பில் ஜனாதிபதியின் நம்பிக்கை; பாராளுமன்றில் வெளியான தகவல்!

ETF – EPF தொடர்பில் ஜனாதிபதியின் நம்பிக்கை; பாராளுமன்றில் வெளியான தகவல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.