Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சவுக்கடி பூங்கா; யாரிடம் உண்மையை கேட்பது?

சவுக்கடி பூங்கா; யாரிடம் உண்மையை கேட்பது?

2 years ago
in அரசியல், செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

கிழக்கு மாகாணத்தில் இன்னும் 10 ஆண்டுக்குள் சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்காக பரந்துபட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக மட்டக்களப்பு விஜயத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார்.

இதை எவ்வாறு ஜனாதிபதி நடைறைப்படுத்த போகிறார் என்று பலரும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வேளையில் வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்களினால் கடந்த 08 ம் திகதி அன்று மட்டக்களப்பு சவுக்கடி பகுதியில் பூங்கா ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சரின் உத்தியோக பூர்வ முகநூல் பக்கத்தில் இது தொடர்பான காணொளி பதிவிடப்பட்டு அதில் “சவுக்கடியில் பூங்கா திறப்பு… பல மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் பூங்கா திறந்து வைக்கப்பட்டது” என்று பதிவிடப்பட்டுள்ளது.

உண்மையில் இதே பூங்கா 2016 ஆண்டு அலி ஸாஹிர் மௌலானா அவர்களினால் அடிக்கல் நாட்டப்பட்டு பூங்கா அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சின் கீழ் 14 மில்லியன் ரூபாய் நிதியிலும் , ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களது ஏற்பாட்டில் நகர திட்டமிடல் , நீர் வழங்கல் உயர் கல்வி அமைச்சின் கீழ் 19 மில்லியன் ரூபாய் நிதியிலும் மொத்தமாக 33 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் இப்பூங்கா நிர்மாணிக்கப்பட்டு,சவுக்கடி மௌலானா பீச் பார்க் என்னும் பெயரில் 2020 ஆண்டு திறந்துவைக்கப்பட்டிருந்தது. ஆனால் மீண்டும் அமைச்சர் வியாழேந்திரன் பல மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் இப்பூங்கா திறக்கப்பட்டுள்ளது என்று தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள விடயம் மக்கள் மத்தியில் ஒரு வெளிப்படைத்தன்மை அற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக இவற்றை பார்க்கின்ற பொழுது செய்யத் அலி ஸாஹிர் மௌலானாவினால் ஒரு பூங்காவும்,வியாழேந்திரன் எம்.பியினால் இன்னொரு பூங்காவும் திறந்துவைக்கப்பட்டதாகவே தெரியும்.
ஆனால் உண்மையில் ஒரே பூங்காவைத்தான் இருவரும் திறந்து வைத்துள்ளனர்.அப்படி என்றால் இதனுடைய அர்த்தம் என்ன என்ற கேள்விகள் ஏறாவூரை சேர்ந்த பலர் மத்தியிலே எழுந்துள்ளதோடு வெளிப்படைத்தன்மை என்ற விடயம் எந்த அளவிற்கு இவ்விடயத்தில் பேணப்பட்டுள்ளது என்று கேள்வி கேட்கின்றனர்.

இது தொடர்பாக ஏறாவூர் பற்று பிரதேச சபை செயலாளரை தொடர்பு கொண்டு கேட்ட பொழுது, இருவராலும் திறக்கப்பட்டது ஒரே பூங்காதான் என்றும், அலி சாஹிர் மௌலானாவினால் திறக்கப்பட பூங்கா திருத்த வேலைகள் செய்யப்பட்டு பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரனினால் திறந்து வைக்கப்பட்டது என்று அவர் கூறுகின்றார்.

இப் பூங்கா தொடர்பில் முகநூல் பக்கங்களில் வந்த செய்திகள் கீழே தரப்படுகின்றன.

தொடர்புடையசெய்திகள்

இலங்கையில் ஸ்டார்லிங்க் இணைய சேவைக்கான நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பம்
செய்திகள்

இலங்கையில் ஸ்டார்லிங்க் இணைய சேவைக்கான நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பம்

June 4, 2025
போதை மாத்திரைகளுடன் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் கைது
செய்திகள்

போதை மாத்திரைகளுடன் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் கைது

June 4, 2025
முத்தையன்கட்டில் மனித நுகர்விற்கு பொருத்தமற்ற உணவுப் பொருட்கள் பறிமுதல்
செய்திகள்

முத்தையன்கட்டில் மனித நுகர்விற்கு பொருத்தமற்ற உணவுப் பொருட்கள் பறிமுதல்

June 4, 2025
“ஆனையிறவு உப்பு” என்ற பெயரில் உள்ளுர் சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை
செய்திகள்

“ஆனையிறவு உப்பு” என்ற பெயரில் உள்ளுர் சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை

June 3, 2025
கனடாவில் புகலிடம் பெறுபவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த நடவடிக்கை
செய்திகள்

கனடாவில் புகலிடம் பெறுபவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த நடவடிக்கை

June 3, 2025
தேர்தல் பிரசார வருமானம் மற்றும் செலவிங்கள் குறித்து முறைப்பாடளிக்க எந்தவொரு நபருக்கும் வாய்ப்பு
செய்திகள்

தேர்தல் பிரசார வருமானம் மற்றும் செலவிங்கள் குறித்து முறைப்பாடளிக்க எந்தவொரு நபருக்கும் வாய்ப்பு

June 3, 2025
Next Post
குமார் தர்மசேனவை கைது செய்யுமாறு உத்தரவு!

குமார் தர்மசேனவை கைது செய்யுமாறு உத்தரவு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.