Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பகிர்ந்தளிக்கப்பட்ட காணிகளிலிருந்து வெளியேற சொல்கிறது வன இலாகா திணைக்களம்; பாதிக்கப்பட்டோர் கவலை!

பகிர்ந்தளிக்கப்பட்ட காணிகளிலிருந்து வெளியேற சொல்கிறது வன இலாகா திணைக்களம்; பாதிக்கப்பட்டோர் கவலை!

3 years ago
in மட்டு செய்திகள்

இளம் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், காணிகளைப் பகிர்ந்தளிக்கும் அரசாங்கத்தின் திட்டத்துக்கு அமைய முள்ளிவட்டவான், வாகநேரி, கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் பயனாளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட காணிகளில் இருந்து, வெளியேறுமாறு வன இலாகா திணைக்களத்தினர் அச்சுறுத்துவதாக பயனாளிகள் கவலை தெரிவிக்கின்றனர். குறித்த விடயம் தொடர்பாக, நேற்று (27) கிழக்கு ஊடகமன்றம் வாழைச்சேனையில் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகசந்திப்பின்போது, பாதிக்கப்பட்ட பயனாளிகளின் சார்பில் கலந்து கொண்டவர்கள் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தனர்.

அவர்கள் தொடர்ந்து கூறும்போது தெரிவித்ததாவது: 2022.06.16 ஆம் திகதி முள்ளிவட்டவான் கிராமத்தில் அரை ஏக்கர் அளவில் 17 பயனாளிகளுக்கு கோறளைப்பற்று தெற்கு, கிரான் பிரதேச செயலாளர் மற்றும் செயலக காணி அதிகாரிகளும் நேரடியாக வந்து, காணிகளைப் பகிர்ந்தளித்ததுடன் ஆவணமும் வழங்கினர். காணிகளைத் துப்புரவு செய்து பயிர்ச் செய்கை நடவடிக்கையில் ஈடுபடும் போது, வன இலாகா அதிகாரிகள் வருகை தந்து, தங்களது கட்டுப்பாட்டில்உள்ள பிரதேசத்தில் எந்தவொரு பயிர்ச்செய்கை நடவடிக்கையையும் மேற்கொள்ளவேண்டாம் என கூறியதுடன் சிலரை கைது செய்து சட்ட நடவடிக்கையும் எடுத்துள்ளனர். ஏழை மக்களாகிய நாங்கள், கஸ்ரப்பட்டு உழைத்த பணத்தை பயிர்ச்செய்கைக்கு செலவு செய்துள்ளோம். தற்போது பலனின்றிப் போகும் நிலையில் உள்ளது. நாங்கள் எந்த அதிகாரியின் கதையைக் கேட்பது என்று புரியாமல் உள்ளது. எனவே குறித்த விடயம் தொடர்பாக காணி வழங்கிய பிரதேச செயலக நிர்வாகத்திடம் நிலைமை தொடர்பாக தெரிவித்தபோதும் அவர்கள் பாராமுகமாக இருப்பது கவலையளிப்பதாக உள்ளது. எனவே, குறித்த இரு தரப்பினருடைய திணைக்களநிர்வாகச் சிக்கலில் நாங்கள் அகப்பட்டு அவஸ்தைப்படுகின்றோம். மேற்குறித்த விடயம் தொடர்பான நிலைமைகளை கவனத்தில் கொண்டு, எங்களுக்கு வழங்கப்பட்ட காணிகளில், பயிர்ச் செய்கை நடவடிக்கையில் ஈடுபடக்கூடியவாறு தீர்வைப் பெற்றுத் தருமாறு கேட்டுள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பு பிள்ளையாரடியில் குடியிருப்புக்குள் புகுந்த 8 அடி முதலை பிடிப்பு
காணொளிகள்

மட்டக்களப்பு பிள்ளையாரடியில் குடியிருப்புக்குள் புகுந்த 8 அடி முதலை பிடிப்பு

September 5, 2026
மட்டு ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை திருத்தலம் நோக்கி பல்லாயிரக்கணக்கானோர் பாதயாத்திரை!
காணொளிகள்

மட்டு ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை திருத்தலம் நோக்கி பல்லாயிரக்கணக்கானோர் பாதயாத்திரை!

September 5, 2026
நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள ஆரையம்பதி மயானக்காணியில் கட்டுமானங்களை நிறுத்த வேண்டும்; சாணக்கியன்!
செய்திகள்

நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள ஆரையம்பதி மயானக்காணியில் கட்டுமானங்களை நிறுத்த வேண்டும்; சாணக்கியன்!

September 5, 2026
மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி
செய்திகள்

மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி

September 4, 2026
புலமைப்பரிசில் பரீட்சையில் மிக்கேல் கல்லூரிக்கு பெருமை சேர்த்த அகர்வின்
செய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சையில் மிக்கேல் கல்லூரிக்கு பெருமை சேர்த்த அகர்வின்

September 4, 2026
மட்டு கிரான் குளம் கடலில் மீன்பிடிக்க சென்ற தோணி கவிழ்ந்த விபத்தில் இரு மீனவர்கள் உயிரிழப்பு ஒருவர் உயிருடன் மீட்பு
செய்திகள்

மட்டு கிரான் குளம் கடலில் மீன்பிடிக்க சென்ற தோணி கவிழ்ந்த விபத்தில் இரு மீனவர்கள் உயிரிழப்பு ஒருவர் உயிருடன் மீட்பு

September 4, 2026
Next Post
பெண்ணை கொலை செய்த சஜித் கட்சி வேட்பாளர்!

பெண்ணை கொலை செய்த சஜித் கட்சி வேட்பாளர்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.