Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
காசா மீது முழு வீச்சில் படையெடுப்பு; இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்ட கருத்து!

காசா மீது முழு வீச்சில் படையெடுப்பு; இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்ட கருத்து!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

இஸ்ரேல் நாட்டில் போர் 21ஆவது நாளாகத் தொடரும் நிலையில், முழு வீச்சில் படையெடுப்பை ஆரம்பிப்பது குறித்து இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான மோதல் 21ஆவது நாளாகத் தொடர்ந்து வருகிறது. ஹமாஸ் படை முதலில் கடந்த 2023.10.07 திகதி காசாவுக்குள் நுழைந்து தாக்குதலை நடத்திய நிலையில், அதற்குப் பதிலடி தரும் நடவடிக்கையில் இஸ்ரேல் இறங்கியுள்ளது.

இப்படி இரு தரப்பும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அங்கே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்தச் சூழலில் இஸ்ரேல் ஹமாஸ் மோதல் குறித்து இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

ஹமாஸை தவிர வேறு எந்த எதிரியுடனும் போரில் ஈடுபட இஸ்ரேலுக்கு விருப்பமில்லை என்று தெரிவித்த இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட், சரியான சூழல் அமையும் போது காசாவில் முழு வீச்சில் படையெடுப்பு தொடங்கும் என்று நடவடிக்கை தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “ஹமாஸுக்கு எதிராக தெற்கே நாங்கள் சண்டையிட்டு வருகிறோம். வடக்கில் எந்தவொரு மோதலுக்கும் தயாராக இல்லை. அதேநேரம் வடக்கில் லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா நடத்தும் தாக்குதலுக்கு நாங்கள் பதிலடி தருகிறோம். இதில் ஹிஸ்புல்லாவுக்கு தான் பல இழப்புகள். நாங்கள் போரை விரிவுபடுத்துவதில் எங்களுக்கு எந்த ஆர்வமும் இல்லை” என்றார். இஸ்ரேலில் தெற்கு பகுதியில் தான் காசா பகுதி அமைந்துள்ளது. அங்கே தான் கடந்த 20 நாட்களுக்கு மேலாக இரு தரப்பிற்கும் இடையே மோதல் தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்கிடையே கடந்த சில நாட்களாக இஸ்ரேலின் வடக்கு எல்லையில் உள்ள லெபனானில் இருந்தும் ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதலை நடத்தி வருகிறது. அதற்கும் இஸ்ரேல் பதிலடி கொடுத்து வந்ததால் போர் விரிவடையும் என்று அஞ்சப்பட்டது.

அதைத்தான் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். தற்போது தங்கள் இலக்குகள் ஹமாஸ் படை மட்டுமே என்று கூறியுள்ள அவர், ஹிஸ்புல்லாவுக்கு பதிலடி கொடுக்கப்பட்டாலும் கூட அங்கே போரை நடத்த விரும்பவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து காசா மீதான படையெடுப்பு குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், “காசா மீதான படையெடுப்பை முழு வீச்சில் ஆரம்பிக்கப் போகிறோம். அது நாள் வெகு தொலைவில் இல்லை . சரியான சூழல் அமையும் போது தாக்குதலை ஆரம்பிப்போம். ஹமாஸிடம் இப்போது பல பிணைக் கைதிகள் இருக்கிறார்கள். அவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று அவர் தெரிவித்தார்.

ஹமாஸுக்கு பதிலடி தரும் வகையில் காசா மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலை நடத்தி வருகிறது. சில காலமாகவே முழு வீச்சில் காசா மீது படையெடுக்க உள்ளதாக இஸ்ரேல் தொடர்ந்து கூறி வருகிறது. இருப்பினும், சர்வதேச அழுத்தம், ஹமாஸ் வசம் இருக்கும் பிணைக் கைதிகள், அங்குள்ள சுரங்க வழித்தடங்கள் உள்ளிட்ட பல காரணங்களால் காசா மீதான படையெடுப்பை இஸ்ரேல் இன்னும் ஆரம்பிக்கவில்லை. இந்தச் சூழலில் இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் கூறிய இந்தக் கருத்துகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

நேற்றைய தினம் இரவு நேரத்தில் வடக்கு காசாவின் பகுதிகளுக்குள் நுழைந்த இஸ்ரேல் பீரங்கிகள் பல்வேறு இலக்குகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியது. காசா இலக்குகளைக் குறித்துவைத்து சரமாரியாகத் தாக்குதலை நடத்திய இஸ்ரேல் படை சில மணி நேரத்தில் மீண்டும் இஸ்ரேலுக்குத் திரும்பிவிட்டது. இஸ்ரேல் போர் அடுத்த கட்டத்திற்குச் செல்வதற்கான நடவடிக்கைகளை இஸ்ரேல் ஆரம்பித்துவிட்டதையே இது காட்டுவதாகப் பலரும் குறிப்பிட்டனர்.

தொடர்புடையசெய்திகள்

ஈரானில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகள் தற்காலிகமாக வெளியேற்றம்
உலக செய்திகள்

ஈரானில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகள் தற்காலிகமாக வெளியேற்றம்

June 17, 2025
முல்லைத்தீவில் இரு கடைகள் தீயில் எரிந்து நாசம்; விஷேட சோதனை நடவடிக்கையில் பொலிஸார்
செய்திகள்

முல்லைத்தீவில் இரு கடைகள் தீயில் எரிந்து நாசம்; விஷேட சோதனை நடவடிக்கையில் பொலிஸார்

June 17, 2025
கிழக்கு பல்கலைக்கழக துணை வேந்தராக பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபன் நியமனம்
செய்திகள்

கிழக்கு பல்கலைக்கழக துணை வேந்தராக பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபன் நியமனம்

June 17, 2025
பொசன் வாரத்தில் அனுராதபுரத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 105 கடைகள் மீது சட்ட நடவடிக்கை
செய்திகள்

பொசன் வாரத்தில் அனுராதபுரத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 105 கடைகள் மீது சட்ட நடவடிக்கை

June 17, 2025
எரிபொருள் குறித்து அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ முக்கிய அறிவிப்பு
செய்திகள்

எரிபொருள் குறித்து அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ முக்கிய அறிவிப்பு

June 17, 2025
எதிர்க்கட்சியின் வெளிநடப்பிற்கு தோல்வியே காரணம்; பிரதி அமைச்சர் சுனில் வட்டகல
செய்திகள்

எதிர்க்கட்சியின் வெளிநடப்பிற்கு தோல்வியே காரணம்; பிரதி அமைச்சர் சுனில் வட்டகல

June 17, 2025
Next Post
புறக்கோட்டை பகுதியிலுள்ள கடையொன்றில் தீ விபத்து; 17 பேர் வைத்தியசாலையில்!

புறக்கோட்டை பகுதியிலுள்ள கடையொன்றில் தீ விபத்து; 17 பேர் வைத்தியசாலையில்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.