பொசன் வாரத்தில் அனுராதபுரத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகள் தொடர்பாக 105 கடைகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அதிக விலைக்கு உணவு விற்பனை செய்தல், காலாவதியான உணவு விற்பனை செய்தல், விலைகள் இல்லாமல் பொருட்களை விற்பனை செய்தல் ஆகியவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அனுராதபுரம் நகரம், அனுராதபுரம் புனித நகரம், மிஹிந்தலை மற்றும் திஸ்ஸ வெவ ஆகிய பகுதிகளில் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.