இஸ்ரேல் – ஈரான் இடையே ஏற்பட்டுள்ள மோதல் தீவிரமடைந்துள்ளமையால் , ஈரானில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் அதிகாரிகள் தற்காலிகமாக தெஹ்ரானில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அதன்படி, அவர்கள் ஈரானின் வடக்குப் பகுதியில் உள்ள ஒரு தற்காலிக இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர், மேலும் முன்னர் வழங்கப்பட்ட எண்கள் மூலம் அனைத்து தொடர்புகளையும் மேற்கொள்ள முடியும்.
அதேசமயம் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து அனைவரும் உடனடியாக வெளியேறுங்கள் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ரம்ப் அறிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடதக்கது.
நான் கையெழுத்திடச் சொன்ன ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட்டிருக்க வேண்டும். ஈரான் அணு ஆயுதத்தை வைத்திருக்க முடியாது. நான் அதை மீண்டும் மீண்டும் சொன்னேன்! ஈரானின் போக்கு மனித உயிர்களை வீணாக்கும் செயல். என்ன ஒரு அவமானம், அனைவரும் உடனடியாக தெஹ்ரானில் இருந்து அனைவரும் வெளியேற வேண்டும் என ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.