Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் ஹிஸ்புல்லாவிடம் உத்தியோகபூர்வமாக கையளிப்பு!

மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் ஹிஸ்புல்லாவிடம் உத்தியோகபூர்வமாக கையளிப்பு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஏ.எல்.எம். ஹிஸ்புல்லாவினால் நிர்மாணிக்கப்பட்ட மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் அரசாங்கத்தினால் கைப்பற்றப்பட்டு, 4 வருடங்களின் பின்னர், மீண்டும் அதனை ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சம்பிரதாயபூர்வமாக நேற்று சனிக்கிழமை (04) புனானையில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தில் வைத்து ஏ.எல்.எம். ஹிஸ்புல்லாவிடம் கையளித்தார்.

மட்டக்களப்பு புனானையில் 400 ஏக்கர் நிலப்பரப்பில் தனியார் பல்கலைக்கழகத்தை முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஏ.எல்.எம். ஹிஸ்புல்லா நிர்மாணித்து வந்துள்ள நிலையில், உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பின்னர், அதனை அரசாங்கம் கையகப்படுத்தியது.

அதனை தொடர்ந்து, இராணுவ பாதுகாப்பில் இருந்து வந்த பல்கலைக்கழகத்தை இராணுவத்தினர் கொரோனா நோய்க்கான சிகிச்சை முகாமாக பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் கல்வியினை மேம்படுத்துவதற்காக இப்பல்கலைக்கழகத்தை வழங்குமாறு ஜனாதிபதியிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைய, இதனை மீண்டும் ஏ.எல்.எம். ஹிஸ்புல்லாவிடம் வழங்குவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் கிழக்கு மாகாண ஆளுநருக்கு ஆலோசனை மற்றும் பணிப்புரை வழங்கப்பட்டது.

அதன் பின்னரே, இந்த தனியார் மட்டக்களப்பு பல்கலைக்கழகம் உரியவரிடம் வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் கலந்துகொண்டு பல்கலைக்கழக திட்டங்களை கேட்டறிந்ததோடு, கற்றல் பகுதிகளை சென்று பார்வையிட்டார்.

பின்னர், குறித்த பல்கலைக்கழகத்தின் திறப்பை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏ.எல்.எம். ஹிஸ்புல்லாவிடம் கையளித்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

ஈரான் வான்வெளி முழுமையாக அமெரிக்க கட்டுப்பாட்டுக்குள்; டொனால்ட் ட்ரம்ப் தெரிவிப்பு
உலக செய்திகள்

ஈரான் வான்வெளி முழுமையாக அமெரிக்க கட்டுப்பாட்டுக்குள்; டொனால்ட் ட்ரம்ப் தெரிவிப்பு

June 18, 2025
மட்டக்களப்பில் 12 சபைகளையும் தோற்ற நீங்கள் மிச்சம் இருக்கின்றவற்றையும் தோற்பீர்கள்; அருண் ஹேமச்சந்திராவை பார்த்து கூறிய சாணக்கியன்
அரசியல்

மட்டக்களப்பில் 12 சபைகளையும் தோற்ற நீங்கள் மிச்சம் இருக்கின்றவற்றையும் தோற்பீர்கள்; அருண் ஹேமச்சந்திராவை பார்த்து கூறிய சாணக்கியன்

June 18, 2025
இஸ்ரேலின் F-35 போர் விமானத்தை  சுட்டு வீழ்த்திய ஈரான்
உலக செய்திகள்

இஸ்ரேலின் F-35 போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான்

June 18, 2025
மட்டக்களப்பு மாவட்டத்தில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை; மட்டு அரசாங்க அதிபர் ஜே.ஜே. முரளிதரன்
செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை; மட்டு அரசாங்க அதிபர் ஜே.ஜே. முரளிதரன்

June 18, 2025
விபத்தில் சிக்கி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த கோட்டைக்கல்லாற்றைச் சேர்ந்த மருத்துவத்துறை மாணவன்
செய்திகள்

விபத்தில் சிக்கி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த கோட்டைக்கல்லாற்றைச் சேர்ந்த மருத்துவத்துறை மாணவன்

June 18, 2025
கரடியனாறு பதுளை வீதியில் நித்திரை செய்தவர்கள் மீது வாகனம் ஏறியதில் இளைஞன் பலி
செய்திகள்

கரடியனாறு பதுளை வீதியில் நித்திரை செய்தவர்கள் மீது வாகனம் ஏறியதில் இளைஞன் பலி

June 18, 2025
Next Post
இலங்கை கிரிக்கெட் தொடர்பில் புதிய தீர்மானம்!

இலங்கை கிரிக்கெட் தொடர்பில் புதிய தீர்மானம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.