Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஆசியாவிலே கேவலம் கெட்ட நாடு இலங்கை; காட்டமாகக்கூறிய தமிழ் எம்.பி!

ஆசியாவிலே கேவலம் கெட்ட நாடு இலங்கை; காட்டமாகக்கூறிய தமிழ் எம்.பி!

3 years ago
in செய்திகள்

ஆசியாவிலேயே கேவலம் கெட்ட ஒரு நாடாக இலங்கை வந்திருக்கின்றதென்றால் ஆட்சியாளர்களின் மனநிலை தான் அதற்கு காரணம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு – மல்லாவி பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்- எங்களுடைய இனம் கிட்டத்தட்ட நாங்கள் படித்த வரலாறுகளின் படி 5000
வருடங்களாக அடிமைகளாக இருந்திருக்கின்றோம். இன்றும் அடிமைகளாக தான் இருக்கின்றோம், நாங்கள் எல்லோரும் கௌரவமான அடிமைகள். ராவணன் ஓர் தமிழ் மன்னன், ஆரியர்களினால் அவரின் சாம்ராச்சியம்
அழிக்கப்பட்டது என்பதும், அவர் அரக்கராக சித்திரிக்கப்பட்டார் என்பதும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

அன்றைய கால கட்டத்தில் கடவுள் நம்பிக்கையோடு சேர்த்து அரக்கர்கள் என்று சொல்லப்பட்டது, இன்றைய நவீன காலகட்டத்தில் விடுதலைப் போராட்டம், நியாயமான உரிமைப் போராட்டம், அதுவும் ஒரு சமூகத்துக்காக குரல் கொடுக்கின்றவர்கள் பயங்கரவாதிகளாக சித்திரிக்கப்பட்டு அழிக்கப்பட்ட
வரலாறுகளும் இடம் பெற்றிருக்கின்றன.

அந்த வகையில் நீங்கள் அந்த இருட்டடிக்கப்பட்ட வரலாற்றை திருப்பி காட்டியிருக்கிறீர்கள். இருட்டடிக்கப்பட்ட எமது வரலாறுகளை மீண்டும் நேர் நிறுத்தி எமது இளைய சமுதாயத்திற்கு ஒரு நல்ல வழிகாட்டிகளாக நீங்கள் இருக்க வேண்டும். ஒரு காலத்தில் இலங்கை போன்று வரவேண்டும் என்று சிந்தித்த சிங்கப்பூர் இன்று உலகில் மிக முன்னேறிய ஒரு நாடாக இருக்கின்றது. இலங்கையில் படித்தவர்கள் நிறைய பேர் அந்த நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஆனால் இங்கே வாழமுடியாமல் நாங்கள் ஓடிக் கொண்டிருப்பதற்கு காரணம் இந்த நாட்டின் ஆட்சியாளர்களின் மனநிலை தான் – என்றார்.

தொடர்புடையசெய்திகள்

13 வயது சிறுமி துஷ்பிரயோக வழக்கு; தந்தையின் நெருங்கிய நண்பர் கைது!
செய்திகள்

13 வயது சிறுமி துஷ்பிரயோக வழக்கு; தந்தையின் நெருங்கிய நண்பர் கைது!

July 30, 2026
பரிதி வட்டம் எறிதலில் இலங்கைக்கு வெள்ளிப் பதக்கம்; பாலித்த பண்டார சாதனை!
செய்திகள்

பரிதி வட்டம் எறிதலில் இலங்கைக்கு வெள்ளிப் பதக்கம்; பாலித்த பண்டார சாதனை!

July 30, 2026
தாய்லாந்தில் கடத்தப்பட்ட 3 இந்திய சுற்றுலாப் பயணிகள் மீட்பு; சித்திரவதை பின்னணியில் அதிர்ச்சி தகவல்கள்!
செய்திகள்

தாய்லாந்தில் கடத்தப்பட்ட 3 இந்திய சுற்றுலாப் பயணிகள் மீட்பு; சித்திரவதை பின்னணியில் அதிர்ச்சி தகவல்கள்!

July 30, 2026
கொழும்பை வந்தடைந்த மேலும் 106 புதிய மெட்ரோ பேருந்துகள்; பயணிகளுக்கு விரைவில் நவீன சேவை!
செய்திகள்

கொழும்பை வந்தடைந்த மேலும் 106 புதிய மெட்ரோ பேருந்துகள்; பயணிகளுக்கு விரைவில் நவீன சேவை!

July 30, 2026
ஈரான் மீது அமெரிக்கா புதிய தாக்குதல்கள்; மத்திய கிழக்கில் பதற்றம் மேலும் தீவிரம்!
செய்திகள்

ஈரான் மீது அமெரிக்கா புதிய தாக்குதல்கள்; மத்திய கிழக்கில் பதற்றம் மேலும் தீவிரம்!

July 30, 2026
உயிரை பணயம் வைத்து பள்ளி செல்லும் மாணவர்கள்; ஹட்டன்–பொகவந்தலாவ பேருந்து சேவை மீது குற்றச்சாட்டு!
செய்திகள்

உயிரை பணயம் வைத்து பள்ளி செல்லும் மாணவர்கள்; ஹட்டன்–பொகவந்தலாவ பேருந்து சேவை மீது குற்றச்சாட்டு!

July 30, 2026
Next Post
லொத்தர் சீட்டில் ஒரு இலக்கத்தை மாற்றி மோசடி; இராணுவ சிப்பாயின் சூட்சும முறை!

லொத்தர் சீட்டில் ஒரு இலக்கத்தை மாற்றி மோசடி; இராணுவ சிப்பாயின் சூட்சும முறை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.