Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கறுப்பு பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள 50 இலங்கை வைத்தியர்கள் !

இலங்கையில் 400 மருத்துவமனைகள் மூடப்பட்டு 5,000 மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறும் அபாயம்!

2 years ago
in செய்திகள்

சுகாதார வல்லுநர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தற்போது நாட்டில் பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது. உரிய நேரத்தில் உரிய தீர்வுகளை வழங்காமல் புறக்கணித்தமையினால் ஏற்பட்டுள்ள இந்தப் பிரச்சினைகளினால் தற்போது நாட்டில் உள்ள மருத்துவமனைகள் மூடப்படும் அபாய சூழ்நிலை உருவாகியுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கடந்த சனிக்கிழமை அரச மருத்துவ அதி காரிகள் சங்கம் சந்தித்த பின்னர் இது தொடர்பான அபாய எச்சரிக்கையினை விடுத்துள்ளது.

எதிர்வரும் மாதங்களில் கிட்டத்தட்ட 400 மருத்துவமனைகள், கிளினிக்குகள் மற்றும் மருத்துவப் பிரிவுகள் மூடப்படும் அபாயம் உள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் மருத் துவர் ஹரித் அலுத்கே தெரிவித்துள்ளார்.

வருடாந்த சுகாதார அறிக்கை – 2020 இன் படி, தற்போது செயற்படும் அரச மருத் துவமனைகளின் எண்ணிக்கை 646 ஆகும். அவற்றில் 400 மூடப்படுவது ஒரு தீவிர சமூகப் பிரச்சினை.

மேலும் 5000-க்கும் அதிகமான மருத் துவர்கள் விரைவில் நாட்டை விட்டு வெளி யேறவுள்ளதாகவும், இது சுகாதாரத்துறையில் நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்து வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுகாதாரத்துறை தொடர்பான முடிவெடுக்கும் செயல்முறையின் சீர்குலைவு மற்றும் அதிக வரிச்சுமை போன்ற பல பிரச்சினைகள் காரணமாக கிட்டத்தட்ட 1,500 மருத்து வர்கள் நாட்டை விட்டு வெளியேறியதால் பல மருத்துவமனைகளை மூடப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மருத்துவர் அலுத்கே குறிப்பிட்டார். அதன்படி, 20 மருத்துவமனைகள் மூடப்பட்டு 44 மருத்து வமனைகள் அரசு பட்டதாரி மருத்துவர் இல்லாமல் பதிவு செய்யப்பட்ட மருத்துவர்களால் நடத்தப்படுகின்றன என்றார்.

அடுத்த இரண்டு மாதங்களில் மேலும் 400-க்கும் அதிகமான மருத்துவமனைகள் மற்றும் பிரிவுகள் மூடப்படும் அபாயத் தில் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். ஏற்கனவே மூடப்பட்டுள்ள பெரும்பாலான மருத்துவமனைகள் வட மாகாணத்தின் மாவட்டங்களிலும் புத்தளம் மற்றும் நுவ ரெலியா போன்ற மாவட்டங்களிலும் காணப்படுகின்றன.

பல மருத்துவர்கள் மற்றும் சிறப்பு மருத்துவர்கள் வெளிநாடு செல்வதற்கான சகல தேவைகளையும் ஏற்கனவே பூர்த்தி செய்துள்ள நிலையில், அந்த மருத்துவர்கள் மற்றும் சிறப்பு நிபுணர்கள் நாட்டை விட்டு வெளியேறினால் நிலைமை மேலும் மோசமாகும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

தொடர்புடையசெய்திகள்

ஜனாதிபதி இன்று ஜெர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயம்
செய்திகள்

ஜனாதிபதி இன்று ஜெர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயம்

June 10, 2025
போலியாகத் தயாரிக்கப்பட்ட வாசனைத் திரவியங்கள் – நுகர்வோர் விவகார ஆணையகம் சோதனை நடவடிக்கை
செய்திகள்

போலியாகத் தயாரிக்கப்பட்ட வாசனைத் திரவியங்கள் – நுகர்வோர் விவகார ஆணையகம் சோதனை நடவடிக்கை

June 10, 2025
கம்பஹாவில் நாளை 10 மணிநேர நீர் வெட்டு
செய்திகள்

கம்பஹாவில் நாளை 10 மணிநேர நீர் வெட்டு

June 10, 2025
பிரேசில் கால்பந்து வீரருக்கு கோவிட் தொற்று உறுதி
உலக செய்திகள்

பிரேசில் கால்பந்து வீரருக்கு கோவிட் தொற்று உறுதி

June 10, 2025
யாழில் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ள திமிங்கிலம்
செய்திகள்

யாழில் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ள திமிங்கிலம்

June 9, 2025
கண்டியைச் சேர்ந்த ஐவர் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம்
செய்திகள்

கண்டியைச் சேர்ந்த ஐவர் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம்

June 9, 2025
Next Post
வங்கக்கடலிலும் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.