Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கைவரிசை காட்டிய சீன பிரஜை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

கைவரிசை காட்டிய சீன பிரஜை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

2 years ago
in செய்திகள்

லெபனான் நாட்டு வர்த்தகர் ஒருவர் தனது தாய்க்கு வைத்தியம் பெறுவதற்காக ஓமானில் இருந்து இந்நாட்டிற்கு வந்து கொண்டிருந்த போது, ​​விமானத்தில் இருந்த வர்த்தகரின் பணப்பையில் இருந்து 14,000 அமெரிக்க டொலர்களை திருடிய சீன நபர் இந்தியாவுக்கு தப்பிச் செல்வதற்காக, வௌ்ளிக்கிழமை (15) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். அங்கு அவரை குடிவரவு திணைக்கள அதிகாரிகள் கைது செய்து விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

48 வயதான சீனப் பிரஜை, லெபனான் வர்த்தகர் மற்றும் அவரது தாயாருடன், ஓமானின் மஸ்கட்டில் இருந்து புதன்கிழமை 13 ஆம் திகதி காலை 07.20 மணியளவில் ஓமன் எயார்லைன் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.

பணத்தை திருடிய சீன பிரஜையை அங்கு கைது செய்ய கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரும் விமான நிலைய சுற்றுலா பொலிஸாரும் இணைந்து பல நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் அம்முயற்சிகள் தோல்வியடைந்தன

இதேவேளை, இந்த சீனப் பிரஜை, வெள்ளிக்கிழமை (15) அதிகாலை 01;20 மணியளவில் இந்தியன் எயார்லைன்ஸின் ஏஐ-284 விமானத்தில் இந்தியாவின் சென்னைக்கு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

அதன்போது, ​​குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

பெறுமதியான உலகின் பல்வேறு நாடுகளின் நாணய அலகுகள் பலவற்றை வைத்திருந்தமைக்காக இந்த சீன பிரஜை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவற்றின் மொத்த பெறுமதி 827,712.76 ரூபாயாகும்

இந்த சீனப் பிரஜை “உலகம் முழுவதும் தேயிலை விற்பனையில் ஈடுபட்டு வரும் விற்பனையாளர் என்றும், அந்த நடவடிக்கைகளில் கிடைத்த பணம் தன்னிடம் இருப்பதாகவும் பொலிஸாரிடம் அறிவித்துள்ளார்” என கட்டுநாயக்க விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சீனப் பிரஜை தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் அவரை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

கனடா வேலைவாய்ப்புக்காக எத்தியோப்பியா ஊடாக பயணித்த இலங்கையர்கள் மீட்பு
செய்திகள்

கனடா வேலைவாய்ப்புக்காக எத்தியோப்பியா ஊடாக பயணித்த இலங்கையர்கள் மீட்பு

June 9, 2026
நேர்முகத் தேர்வில் முன்னுரிமை கோரி யாழ் சுகாதார தொண்டர்களின் போராட்டம் தீவிரம்!
செய்திகள்

நேர்முகத் தேர்வில் முன்னுரிமை கோரி யாழ் சுகாதார தொண்டர்களின் போராட்டம் தீவிரம்!

June 9, 2026
நானுஓயாவில் மணல் ஏற்றிச் சென்ற லொறி மண் மேட்டில் மோதி விபத்து!
செய்திகள்

நானுஓயாவில் மணல் ஏற்றிச் சென்ற லொறி மண் மேட்டில் மோதி விபத்து!

June 9, 2026
தலவத்துகொட உணவக தீ விபத்து; சிகிச்சை பெற்று வந்த மூவரும் உயிரிழப்பு!
செய்திகள்

தலவத்துகொட உணவக தீ விபத்து; சிகிச்சை பெற்று வந்த மூவரும் உயிரிழப்பு!

June 9, 2026
காற்றின் வேகம் அதிகரிக்கும்; கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை
செய்திகள்

காற்றின் வேகம் அதிகரிக்கும்; கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை

June 9, 2026
முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு ஊழல் விவகாரத்தில் நான்கு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை
செய்திகள்

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு ஊழல் விவகாரத்தில் நான்கு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை

June 9, 2026
Next Post
சுவிட்சர்லாந்திலிருந்து நாடு கடத்தப்பட்ட தமிழர்கள்!

சுவிட்சர்லாந்திலிருந்து நாடு கடத்தப்பட்ட தமிழர்கள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.