Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஆடைகளை கிழித்து நூதன முறையில் பணம் பறிக்கும் பெண்!

ஆடைகளை கிழித்து நூதன முறையில் பணம் பறிக்கும் பெண்!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

கார்களில் லிப்ட் கேட்டு ஏறி, ஆடைகளை கிழித்துக்கொண்டு பலாத்கார நாடகமாடி, காரில் உள்ளவர்களிடம் பணம் பறித்து வந்த பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்தியாவின் ஹைதராபாத் அருகே இருக்கும் சாஸ்திரிபுரத்தைச் சேர்ந்தவர் சுமையா சுல்தானா (30). இவர் தனியாக காரில் வரும் ஆண்களை குறிவைத்து லிப்ட் கேட்டு ஏறுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். காரில் ஏறியவுடன் அவர்களை மயக்குவது போல பேசி வலையில் வீழ்த்துவார்.

பின்னர், சிறிது தூரம் அவர்களுடன் அந்தரங்கமாக பேசிக்கொண்டு வருவார். இதனால் ஆண்கள் சபலப்படும் நேரத்தில் சுமையா, திடீரென தனது ஆடைகளைத் தானே கிழித்துக் கொண்டு கதறி அழுவார். காரில் உள்ளவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பொலிஸில் முறைப்பாடு செய்யப் போவதாக அழுதபடி கூறுவார்.

இதனால் பயந்து போகும் ஓட்டுநர்களை மிரட்டி அவர்களிடம் இருக்கும் பணத்தை பிடுங்கிக் கொண்டு காரை விட்டு இறங்கி விடுவது அவரது வழக்கம். இவரது மிரட்டலுக்கு பயந்து போகும் ஓட்டுநர்கள், முறைப்பாடு ஏதும் அளிக்காமல் பணத்தை மட்டும் கொடுத்துவிட்டு, கிளம்பி விடுவார்கள். இது சுமையா சுல்தானாவுக்கு சாதகமாக மாறிப் போனது.

இந்தநிலையில், வழக்கம் போல நேற்று ஒரு கார் ஓட்டுநரிடம் லிப்ட் கேட்டு பயணிக்கும் போது, தன்னுடைய பாணியில் ஜாக்கெட்டை கிழித்துக் கொண்டு பணம் கேட்டு மிரட்டியுள்ளார். ஆனால் ஓட்டுநர் செய்யாத தப்புக்கு ஏன் பணம் தர வேண்டும் என்று கேட்டதுடன் பணம் தர மறுத்து, நேராக வண்டியை பொலிஸ் நிலையத்திற்கு விட்டுள்ளார். காரில் இருந்த சுமையாவை பொலிஸில் ஒப்படைத்து இது குறித்து பொலிஸாரிடம் முறைப்பாடு அளித்துள்ளார்.

இதையடுத்து, இருவரிடமும் பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர். அதில், சுமையா பல ஓட்டுநர்களை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறி பொலிஸாரிடம் சிக்க வைத்ததும், பலரிடம் பணம் பறித்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, அவரை கைது செய்த பொலிஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தொடர்புடையசெய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் உண்மை வெளிவராமல் தடுக்க உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, திலித் ஜயவீர முயற்சி
செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் உண்மை வெளிவராமல் தடுக்க உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, திலித் ஜயவீர முயற்சி

June 9, 2026
தொல்பொருள் மதிப்புள்ள புத்திசிலையை திருடிய பிக்கு மற்றும் முன்னாள் இராணுவ அதிகாரிகள் கைது
செய்திகள்

தொல்பொருள் மதிப்புள்ள புத்திசிலையை திருடிய பிக்கு மற்றும் முன்னாள் இராணுவ அதிகாரிகள் கைது

June 9, 2026
மட்டு மாமாங்கம் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு
செய்திகள்

மட்டு மாமாங்கம் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு

June 9, 2026
ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி உயர்தர பரீட்சை ஆரம்பமாகும்
செய்திகள்

ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி உயர்தர பரீட்சை ஆரம்பமாகும்

June 8, 2026
கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு ஐஸ் போதைப்பொருள் கடத்திய பெண் கைது
செய்திகள்

கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு ஐஸ் போதைப்பொருள் கடத்திய பெண் கைது

June 8, 2026
கரடியனாற்றில் பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் 3 பேர் கைது
செய்திகள்

கரடியனாற்றில் பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் 3 பேர் கைது

June 8, 2026
Next Post
பொலிஸ் சீருடை அணிந்து கொள்ளையிட்ட கடற்படை சிப்பாய்கள் கைது!

பொலிஸ் சீருடை அணிந்து கொள்ளையிட்ட கடற்படை சிப்பாய்கள் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.