Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் சுத்திகரிப்பு பணிகள் முன்னெடுப்பு! 

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் சுத்திகரிப்பு பணிகள் முன்னெடுப்பு! 

2 years ago
in செய்திகள்

சீரற்ற காலநிலை, மழை, வெள்ளம் மற்றும் வான்கதவுகள் திறப்பு காரணமாக தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தின் சில பகுதிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன.

வெள்ள அனர்த்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் உள்ளிட்ட குழுவினர் பார்வையிட்டதுடன் பாதிக்கப்பட்ட பகுதிகளை மிகுந்த சிரமத்துடன் சுத்தப்படுத்தும் ஊழியர்களுடன் உபவேந்தர் உள்ளிட்ட குழுவினரும் இணைந்து சுத்திகரிக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

சீரற்ற காலநிலை மற்றும் பல்கலைக்கழக வளாகத்துக்குள் வெள்ளநீர் புகுந்ததன் காரணமாக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 22.01.2024 வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ள அதேவேளை பல்கலைக்கழகத்துக்குள் அவசர நிலையை பிரகடனப்படுத்தி சகல தரப்பு ஊழியர்களின் ஒத்துழைப்புடன் வளாகத்தில் முழுமையாக சுத்திகரிக்கும் பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கருடன் பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர், கலை கலாச்சார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில், அரபு மற்றும் இஸ்லாமிய பீடத்தின் பீடாதிபதி எம்.எச்.ஏ. முனாஸ், வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் பீடாதிபதி கலாநிதி எஸ்.சபீனா எம்.ஜி.எச்.,பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் ஏ.எம்.எம். முஸ்தபா, வேலைப்பகுதி பொறியியலாளர் எம்.எஸ்.எம். பஸில், மற்றும் பேராசிரியர்கள் கல்விசாரா ஊழியர் சங்க தலைவர் எம்.ரீ.எம். தாஜுதீன். செயலாளர் எம்.எம்.முஹம்மட் காமில் உள்ளிட்ட பலரும் இணைந்திருந்தனர்.

தற்போது பல்கலைக்கழகத்துக்குள் இருந்த வெள்ளம் வடிந்துள்ள நிலையில் தாழ்வான சில இடங்களில் தற்போதும் நீர் தங்கியிருப்பதை அவதானிக்க முடிந்தது.

ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் காரணமாக பல்கலைக்கழகத்தின் சில பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தங்களுக்கு ஏற்கனவே அனர்த்த முகாமைத்துவ பிரிவினரினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களின் காரணமாக பாரிய சொத்து இழப்புக்களை ஊழியர்களின் மேலான ஒத்துழைப்புடன் குறைக்க கூடியதாக இருந்ததாக உபவேந்தர் குறிப்பிட்டார்.

மேலும், தங்களது சக்திக்கு மேலதிகமாக ஏற்பட்டுள்ள சேதங்கள் தொடர்பில் விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் எதிர்காலத்தில் இவ்வாறான அனர்த்தங்கள் ஏற்பட்டால் கையாளவேண்டிய நடைமுறைகள் தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் கருத்து வெளியிட்டார்.

அத்துடன், சேதங்கள், மீள் கட்டுமானம் மற்றும் எதிர்கால அனர்த்த தவிர்ப்பு திட்டவரைபுகள் தொடர்பிலும் விரைவில் சம்மந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் சுத்திகரிப்பு பணிகளில் மிகுந்த சிரத்தையுடன் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக ஊழியர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

சுரேஷ் சலேவின் ரிட் மனு; இடைக்கால மனுக்கள் ஜூலை 17 வரை ஒத்திவைப்பு
செய்திகள்

சுரேஷ் சலேவின் ரிட் மனு; இடைக்கால மனுக்கள் ஜூலை 17 வரை ஒத்திவைப்பு

July 10, 2026
கதிர்காம பாதயாத்திரை ஆரம்பம்; உகந்தை–குமண காட்டுப்பாதை பக்தர்களுக்காக திறப்பு!
காணொளிகள்

கதிர்காம பாதயாத்திரை ஆரம்பம்; உகந்தை–குமண காட்டுப்பாதை பக்தர்களுக்காக திறப்பு!

July 10, 2026
டொனால்ட் ட்ரம்பை கொல்ல ஈரான் இரகசிய சதி; இஸ்ரேல் எச்சரிக்கை!
செய்திகள்

டொனால்ட் ட்ரம்பை கொல்ல ஈரான் இரகசிய சதி; இஸ்ரேல் எச்சரிக்கை!

July 10, 2026
இரத்தினபுரியில் இளம் பெண் மர்ம மரணம்; பொலிஸார் விசாரணை!
செய்திகள்

இரத்தினபுரியில் இளம் பெண் மர்ம மரணம்; பொலிஸார் விசாரணை!

July 10, 2026
மட்டக்களப்பு புதுப்பாலத்தின் தற்காலிக கட்டுமானம் நிறைவு; பாதுகாப்பு உறுதியானதும் மக்கள் பாவனைக்கு திறக்க உத்தரவு!
செய்திகள்

மட்டக்களப்பு புதுப்பாலத்தின் தற்காலிக கட்டுமானம் நிறைவு; பாதுகாப்பு உறுதியானதும் மக்கள் பாவனைக்கு திறக்க உத்தரவு!

July 10, 2026
யாழில் காணியை இராணுவத்திற்கு வழங்கும் முயற்சி; பொதுமக்கள் எதிர்ப்பு!
செய்திகள்

யாழில் காணியை இராணுவத்திற்கு வழங்கும் முயற்சி; பொதுமக்கள் எதிர்ப்பு!

July 10, 2026
Next Post
இளம் பெண்கள்  மூலமாக முன்னெடுக்கப்பட்ட பண மோசடி; பலர் கைது!

இளம் பெண்கள்  மூலமாக முன்னெடுக்கப்பட்ட பண மோசடி; பலர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.