இரத்தினபுரி, கொடிகமுவ பகுதியில் தனியாக வசித்து வந்த 32 வயதுடைய பெண் ஒருவர் தனது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கமகே நிசான்ச சந்தமாலி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்தவராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அந்த வீட்டின் பிரதான நுழைவாயில் வழக்கமாக மூடியே காணப்பட்ட நிலையில், கடந்த 7ஆம் திகதி முதல் கதவு திறந்திருந்ததை அவதானித்த அக்கம்பக்கத்தினர் சந்தேகமடைந்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் வீட்டைச் சோதனையிட்டபோது, படுக்கையறையில் பெண்ணின் சடலத்தை மீட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளின் போது, உயிரிழந்த பெண்ணின் உடல் தொடர்பாக சில சந்தேகத்திற்கிடமான சூழ்நிலைகள் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனினும், மரணத்திற்கான துல்லியமான காரணம் நீதிமருத்துவ பரிசோதனை மற்றும் மேலதிக விசாரணைகளின் பின்னரே உறுதிப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இரத்தினபுரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.








