Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாம் புதினம் பார்ப்பதற்கு வரவில்லை; இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவிப்பு!

நாம் புதினம் பார்ப்பதற்கு வரவில்லை; இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவிப்பு!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்திலே 10, 000 பேர் வேலை செய்யக் கூடிய தொழிற்சாலையை உருவாக்கும் நோக்குடம் தற்போது வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் எருவில் கிழக்கு பகுதியில் அமைக்கப்படவுள்ள வீதி அபிவிருத்திகளைப் பணிகளை நேற்று வியாழக்கிழமை (18.01.2024) இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் பார்வையிட்டார்.

செப்பனிடப்படவுள்ள வீதிகளைப் பார்வையிட்ட பின்னர் இராஜாங்க அமைச்சர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது இறைவனுடைய அருளாலும், அரசாங்கம் முன்னெடுத்துள்ள காத்திரமான நடவடிக்கைகளாலும் பொருளாதாரம் படிப்படியாக மீளெழுச்சி கண்டு வருகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்திலே 36000 விதவைத் தாய்மார்கள் உள்ளார்கள், 8000 மாற்றுத் திறனாளிகள் உள்ளர்கள், 25000 பேர் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ளார்கள், 8000 பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ளார்கள், இவ்வாறான நிலையில் இம்மாவட்டத்தில் எந்த தொழிற்சாலையையும் உருவாக்கவில்லை.

நாம் மட்டக்களப்பு மாவட்டத்திலே 10, 000 பேர் வேலை செய்யக்கூடிய தொழிற்சாலையை உருவாக்கும் நோக்குடம் தற்போது வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தமது குடும்பத்தினரோடு இம்மாவட்ட மக்கள் இம்மாவட்டத்திலே வாழவேண்டும். நாம் உரிமைக்காகவும், அபிவிருத்திக்காகவும் குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

எமக்கு இரண்டும் தேவை. நாம் புதினம் பார்ப்பதற்கு வரவில்லை. எனவே எமக்கு உரிமையும் தேவை, அபிவிருத்தியும் தேவை என்பதை மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

மக்களுக்கு கௌரவமான வாழ்க்கையை நாம் உருவாக்க வேண்டும். பிச்சைக்காரர்களின் புண் போல ஒரே பிரச்சனையை வைத்துக் கொண்டு கதைத்துக் கொண்டிருக்க முடியாது.

பிச்சைக்காரன் புண்ணை காட்டி பிச்சை எடுப்பான் , மாறாக சிலர் தமிழர்களின் பிரச்சனையைக் காட்டி வாக்கெடுக்கின்றார்கள். இறுதியில் ஒன்றும் நடைபெறப்போவதில்லை. எம்மைப் பொறுத்தவரையில் எமது சமூகத்திற்கு எம்மால் முடிந்த சேவையைச் செய்யவேண்டும் என்பதுதான் எமது நோக்குமாகும் என அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

அதிகபட்ச சில்லறை விலையை மீறி அரிசி விற்பனை; இரண்டு கடைகளுக்கு ரூ.3 இலட்சம் அபராதம்!
செய்திகள்

அதிகபட்ச சில்லறை விலையை மீறி அரிசி விற்பனை; இரண்டு கடைகளுக்கு ரூ.3 இலட்சம் அபராதம்!

August 9, 2026
சிறு கடனாளிகளுக்கு கடும் சட்டம்; பெரும் கடனாளிகளுக்கு ஏன் சலுகை? – பாராளுமன்றத்தில் சாணக்கியன் கேள்வி
செய்திகள்

சிறு கடனாளிகளுக்கு கடும் சட்டம்; பெரும் கடனாளிகளுக்கு ஏன் சலுகை? – பாராளுமன்றத்தில் சாணக்கியன் கேள்வி

August 9, 2026
தமிழர் அரசியல் பேரவையில் இணையுமாறு கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு ரவூப் ஹக்கீம் அழைப்பு
அரசியல்

தமிழர் அரசியல் பேரவையில் இணையுமாறு கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு ரவூப் ஹக்கீம் அழைப்பு

August 9, 2026
ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஓமான் ஒப்பந்தம் மட்டும் போதாது; ஈரான்
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஓமான் ஒப்பந்தம் மட்டும் போதாது; ஈரான்

August 9, 2026
சாவகச்சேரி பிரதான சாலையில் அமைந்துள்ள வேப்பமரங்களை வெட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை
செய்திகள்

சாவகச்சேரி பிரதான சாலையில் அமைந்துள்ள வேப்பமரங்களை வெட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை

August 9, 2026
போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் சுதந்திரக்கட்சியின் தொகுதி தலைவர் கைது
செய்திகள்

போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் சுதந்திரக்கட்சியின் தொகுதி தலைவர் கைது

August 9, 2026
Next Post
தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர்களும் போராட்டம்!

தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர்களும் போராட்டம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.