Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஐ.நாவின் கோரிக்கையை பகிரங்கமாக மறுத்தது இலங்கை அரசு!

ஐ.நாவின் கோரிக்கையை பகிரங்கமாக மறுத்தது இலங்கை அரசு!

3 years ago
in செய்திகள்

யுக்திய விசேட நடவடிக்கையை ஐ.நா உட்பட பல அமைப்புக்கள் விமர்சித்தாலும் இந்த நடவடிக்கையானது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலால் இயக்கப்படவில்லை என பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

பாதாளம் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் எங்களுக்கு தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல் இல்லை.

அவர்களின் நடவடிக்கைகளை ஒழிப்பதே எங்களின் ஒரே இலக்கு, எவருடனும் தனிப்பட்ட பிரச்சினைகள் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்

இதேவேளை இந்த நடவடிக்கையை எதிர்ப்பவர்கள் குற்றச் செயல்களால் ஆதாயம் அடைபவர்களாவர். போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்ட முக்கிய நபர்களில் 65% க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டதன் மூலம் போதைப்பொருள் இருப்புக்கள் கணிசமான அளவில் குறைந்துள்ளன.

மேலும் நாட்டின் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளை முழுமையாக அகற்றும் வரை இந்த நடவடிக்கை தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

முதலாம் இணைப்பு

ஒரு மாத காலப்பகுதியில் 30,000 இற்கும் அதிகமானோரை கைது செய்வதற்கு வழிவகுத்த ‘யுக்திய’ போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கையை உடனடியாக நிறுத்துமாறு ஐக்கிய நாடுகளின் உயர்மட்ட நிபுணர்கள் குழு இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

‘யுக்திய’ எனப்படும் இந்த நடவடிக்கையை உடனடியாக நிறுத்திவிட்டு மறுஆய்வு செய்து சுகாதாரம் மற்றும் மனித உரிமைகள் அடிப்படையிலான கொள்கைகளில் கவனம் செலுத்துமாறு அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

போதைப்பொருள் பாவனையாளர்களுக்கும் மனித உரிமைகள் இருப்பதாகவும், மேலும் பாகுபாடுகள் மற்றும் களங்கங்களை எதிர்கொள்ளாமல் கண்ணியமான வாழ்க்கை வாழத் தகுதியானவர்கள் என்றும் ஐக்கிய நாடுகளின் உயர்மட்ட நிபுணர்கள் குழு சுட்டிக்காட்டியுள்ளது.

‘யுக்திய’ எனப்படும் பாதுகாப்பு நடவடிக்கையின் போது சித்திரவதைகள் மற்றும் தவறான சிகிச்சைகள் பதிவாகியுள்ளதாக உயர்மட்ட நிபுணர்கள் குழு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

கட்டாய புனர்வாழ்வு மையங்கள் உடனடியாக மூடப்பட்டு, தன்னார்வ, சான்றுகள் அடிப்படையிலான, உரிமைகள் அடிப்படையிலான மற்றும் சமூகம் சார்ந்த சமூக சேவைகளால் மாற்றப்பட வேண்டும் என்று கூறி, அதற்கான தொழில்நுட்ப உதவிகளை வழங்க அவர்கள் தயாராக உள்ளனர்.

மேலும், சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் தரநிலைகளுக்கு இணங்க, போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான தற்போதைய சட்டத்தை மறுஆய்வு செய்யுமாறும், போதைப்பொருள் கட்டுப்பாடு மற்றும் சிகிச்சை நடவடிக்கைகளில் ஆயுதப்படைகளின் ஈடுபாட்டை நிறுத்துமாறும் அவர்கள் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறார்கள்.

தொடர்புடையசெய்திகள்

வீரகத்திப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து மாமாங்கேஸ்வரர் கொடிச்சீலை கொண்டுவரப்பட்டது
காணொளிகள்

வீரகத்திப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து மாமாங்கேஸ்வரர் கொடிச்சீலை கொண்டுவரப்பட்டது

August 2, 2026
மூதூரில் கோர விபத்தில் பல்கலை மாணவன் மற்றும் பிரான்ஸ் செல்லவிருந்த இளைஞன் பலி
செய்திகள்

மூதூரில் கோர விபத்தில் பல்கலை மாணவன் மற்றும் பிரான்ஸ் செல்லவிருந்த இளைஞன் பலி

August 2, 2026
தரமற்ற தலைக்கவசங்கள் உற்பத்தி மற்றும் விற்பனை செய்தால் சட்டநடவடிக்கை
செய்திகள்

தரமற்ற தலைக்கவசங்கள் உற்பத்தி மற்றும் விற்பனை செய்தால் சட்டநடவடிக்கை

August 2, 2026
16 ஆண்டுகளுக்குப் பிறகு பேராதனையில் பூத்த உலகின் மிகப்பெரிய ஓர்க்கிட் மலர்
செய்திகள்

16 ஆண்டுகளுக்குப் பிறகு பேராதனையில் பூத்த உலகின் மிகப்பெரிய ஓர்க்கிட் மலர்

August 2, 2026
மட்டக்களப்பில் “கூரிய பார்வை, சிறந்த கற்றல்” திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு
செய்திகள்

மட்டக்களப்பில் “கூரிய பார்வை, சிறந்த கற்றல்” திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு

August 2, 2026
அஸ்வெசும கொடுப்பனவில் மோசடி செய்த இரு பெண் அதிகாரிகளுக்கு விளக்கமறியலில்
செய்திகள்

அஸ்வெசும கொடுப்பனவில் மோசடி செய்த இரு பெண் அதிகாரிகளுக்கு விளக்கமறியலில்

August 2, 2026
Next Post
வருடாந்த இடமாற்றம் தொடர்பில் கடுமையான தீர்மானம் மேற்கொண்டுள்ள அரசு!

வருடாந்த இடமாற்றம் தொடர்பில் கடுமையான தீர்மானம் மேற்கொண்டுள்ள அரசு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.