Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வெருகல் படுகொலையின் 39 ஆவது ஆண்டு நினைவுதினம் இன்று

வெருகல் படுகொலையின் 39 ஆவது ஆண்டு நினைவுதினம் இன்று

1 day ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

திருகோணமலை வெருகல் படுகொலையின் 39ஆவது நினைவேந்தல் நிகழ்வு வெருகல் – பூநகர் பகுதியில் இன்று (12) மிகவும் உணர்வுபூர்வமான முறையில் நினைவுகூறப்பட்டது.

வெருகல் -ஈச்சிலம்பற்று முகாம்களில் தஞ்சமடைந்திருந்த மக்களுக்கான உலர் உணவுப் பொதிகளை ஏற்றிவந்த அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டு 39 வருடங்களாகியும் நீதியும், நிவாரணங்களும் கிடைக்காத நிலையில் குறித்த நினைவேந்தலை பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.

நினைவேந்தல் நிகழ்வில் முதலில் ஆத்ம சாந்தி வேண்டிய பூஜைகள் இடம்பெற்று பொதுச் சுடர் ஏற்றி வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உருவப் படங்களுக்கு விளக்கேற்றி மலர்தூவி ஆத்மா சாந்தி வேண்டி நினைவஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் வெருகல் பிரதேச சபையின் இலங்கை தமிழரசு கட்சியின் தவிசாளர் , உதவி தவிசாளர், உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களும் இவ் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

திருகோணமலை மாவட்டத்தின் ஈச்சிலம்பற்று பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அகதி முகாம்களில் தஞ்சமடைந்திருந்த மக்களுக்கான உலர் உணவுப்பொருட்களை சேருவில பகுதியில் இருந்து ஈச்சிலம்பற்று நோக்கி எடுத்து வரும்போது மகிந்தபுர பகுதியில் வைத்து மூன்று அரச அதிகாரிகள் உட்பட 21பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். இந்த வெருகல் படுகொலையின் 39வது நினைவுதினம் (12.06.2025) இன்றாகும்.

அன்று நாட்டில் நிலவிய யுத்தசூழல் காரணமாக வெருகல் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மக்கள் ஈச்சிலம்பற்று, பூமரத்தடிச்சேனை மற்றும் மாவடிச்சேனை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டிருந்த அகதி முகாம்களில் தஞ்சமடைந்திருந்தார்கள். இவர்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் அரசாங்கம் சேருவில பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் ஊடாக வழங்கி வந்தது.

இந்நிலையில் 1986ம் ஆண்டு யூன் மாதம் 12ம் திகதி அகதிகளுக்கான நிவாரணங்களை வண்டில்களை கொண்டுவந்து ஏற்றிச் செல்லுமாறு அப்போது மாவட்ட அரசாங்க அதிபராக இருந்த வர்ணசூரிய அவர்களினால் மக்களுக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் முகாம்களுக்கு பொறுப்பான அரச அதிகாரிகள் மூவர் உட்பட 21பேர் மாட்டு வண்டில்களுடன் சேருவில நோக்கிச் சென்றார்கள்.

அங்கிருந்து நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு ஈச்சிலம்பற்று நோக்கி வரும்போது மகிந்தபுரவில் வைத்து ஆயுதம் தாங்கிய நபர்களினால் இவர்கள் வழிமறிக்கப்பட்டு, பிரதான வீதியில் இருந்து 50 மீற்றர் தூரம் அழைத்துச் செல்லப்பட்டு முழங்காலில் இருக்க வைத்து பின்னர் வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும் படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள்.

இதில் மூன்று அரச அதிகாரிகள் உட்பட 21பேர் படுகொலை செய்யப்பட்டதோடு மூன்றுபேர் படுகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில் உயிர் தப்பியிருந்தார்கள். படுகொலை செய்யப்பட்டவர்களில் இருவர் முஸ்லிம் சகோதரர்களாவர்.

இப்படுகொலைச் சம்பவத்தில் பின்வரும் நபர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள்

1.அண்ணாமலை தங்கராஜா – கிராம சேவகர் (தம்பலகாமம்) – ஈச்சிலம்பற்று முகாம்

2.அலிபுகான் – கிராம சேவகர் (தோப்பூர்) – பூமரத்தடிச்சேனை முகாம்

3.அயாசு முகம்மது அப்துல் லத்தீப் – (பாலத்தோப்பூர்) – மீள்குடியேற்ற உத்தியோகத்தர் – பூநகர் முகாம்

4.கோணாமலை வேலாயுதம் – பூமரத்தடிச்சேனை

5.கதிர்காமத்தம்பி -விநாயகமூர்த்தி – பூமரத்தடிச்சேனை

6.தெய்வேந்திரம் நவரெட்ணம் பூமரத்தடிச்சேனை

7.தம்பிராசா நவரெட்ணம் பூநகர்

8.கனகசபை கனகசுந்தரம் – பூநகர்

9.கதிர்காமத்தம்பி செல்லத்தம்பி – பூநகர்

10.மூத்ததம்பி காசிப்பிள்ளை – பூநகர்

11.கதிர்காமத்தம்பி நாகராசா – பூநகர்

12.வீரபத்திரன் நடேசபிள்ளை – பூநகர்

13.முத்தையா காளிராசா – பூநகர்

14.முத்துக்குமார் வேலுப்பிள்ளை – பூநகர்

15.வைரமுத்து சித்திரவேல் – விநாயகபுரம், ஈச்சிலம்பற்று

16.சித்திரவேல் சிவலிங்கம் – விநாயகபுரம், ஈச்சிலம்பற்று

17.வீரபத்திரன் சோமசுந்தரம் – விநாயகபுரம், ஈச்சிலம்பற்று

18.சித்திரவேல் தம்பாப்பிள்ளை – விநாயகபுரம், ஈச்சிலம்பற்று

19.நல்லையா பரமேஸ்வரன் இலங்கைத்துறை முகத்துவாரம்

20.தாமோதரப்பிள்ளை தங்கராசா – ஈச்சிலம்பற்று

21.புண்ணியம் மதிவதனன் – பூமரத்தடிச்சேனை

அத்துடன் வீரபத்திரன் சோமசுந்தரன், வேலுப்பிள்ளை கிருஸ்ணபிள்ளை ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் தப்பியிருந்தார்கள்.

Tags: Battinaathamnewsinternationalnewspoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பொத்துவில் வரையான கடலோரப் பகுதி மீனவர்களுக்கு பலத்த காற்று தொடர்பில் எச்சரிக்கை
செய்திகள்

பொத்துவில் வரையான கடலோரப் பகுதி மீனவர்களுக்கு பலத்த காற்று தொடர்பில் எச்சரிக்கை

June 13, 2025
நுரைச்சோலை மின் நிலையத்தின் மூன்றாவது பிறப்பாக்கி செயலிழப்பு; மின் விநியோகத்தில் பாதிப்பு இல்லை என மின்சார சபை உறுதி
செய்திகள்

நுரைச்சோலை மின் நிலையத்தின் மூன்றாவது பிறப்பாக்கி செயலிழப்பு; மின் விநியோகத்தில் பாதிப்பு இல்லை என மின்சார சபை உறுதி

June 13, 2025
பயணித்துக்கொண்டிருந்த பேருந்து மீது மரம் முறிந்து விழுந்ததில் பாடசாலை மாணவி உட்பட இருவர் காயம்
செய்திகள்

பயணித்துக்கொண்டிருந்த பேருந்து மீது மரம் முறிந்து விழுந்ததில் பாடசாலை மாணவி உட்பட இருவர் காயம்

June 13, 2025
ஆனையிறவு உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பிற்கு ஆனையிறவு உப்பு என பெயர் மாற்றம்
செய்திகள்

ஆனையிறவு உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பிற்கு ஆனையிறவு உப்பு என பெயர் மாற்றம்

June 13, 2025
மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப தகராறு; கார் தீக்கிரை
செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப தகராறு; கார் தீக்கிரை

June 13, 2025
வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளராக சு.சுதாகரன் மற்றும் பிரதி தவிசாளராக கு.பத்மநீதன் தெரிவு
அரசியல்

வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளராக சு.சுதாகரன் மற்றும் பிரதி தவிசாளராக கு.பத்மநீதன் தெரிவு

June 13, 2025
Next Post
ஜனாதிபதி பொது மன்னிப்பு சர்ச்சை குரித்து சட்டத்தரணிகள் சங்கம் அநுரவுக்கு அனுப்பியுள்ள கடிதம்

ஜனாதிபதி பொது மன்னிப்பு சர்ச்சை குரித்து சட்டத்தரணிகள் சங்கம் அநுரவுக்கு அனுப்பியுள்ள கடிதம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.