Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் மூலதாரர்கள் கிடைக்க மாட்டார்கள்; தேடவும் வேண்டாம் என்கிறார் எம்.பி!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் மூலதாரர்கள் கிடைக்க மாட்டார்கள்; தேடவும் வேண்டாம் என்கிறார் எம்.பி!

3 years ago
in முக்கிய செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளை தேடுவதற்கு முயற்சிக்கவேண்டாம் – கிடைக்கப்போவதும் இல்லை. ஏனெனில், இலங்கையில் இதற்கு முன்னர் பெருமளவில் உயிர்கள் இழக்கப்பட்ட போதும் அந்த சூத்திரதாரிகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்று கூறியுள்ளார் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தன ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறீகொத்தாவில் நேற்று
அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

இதன்போது செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையி லயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.மேலும், “உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கவில்லைஎன கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். இந்த விடயம் ஆழமாக ஆராய்ந்து பார்க்கவேண்டியதாகும். உயிர் ஒன்று இல்லாமல் போனால் அதற்கு நியாயம் கிடைப்பதில்லை. பணத்தால் அதனை மதிப்பிட முடியாது. இலங்கையில் பெருமளவில் உயிர்கள் இழக்கப்பட்டிருக்கின்றன. இவ்வாறு இழக்கப்பட்ட உயிர்களின் எந்தவொரு சூத்திரதாரியையும் இதுவரை கண்டுபிடிக்க முடியாமல் போயிருக்கிறது. அதனால் தேடுவதற்கு முயற்சிக்கவும் வேண்டாம் – கிடைக்கப்போவதும் இல்லை. இலங்கையின் பாதுகாப்பு முக்கியமாகும். அதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதும் அவசியமாகும். தமிழ், சிங்கள, முஸ்லிம் என பாராளுமன்றத் தலைவர்கள் 125பேர் கொலை செய்யப்பட்டனர். இவர்களின் கொலை சூத்திரதாரிகளில் ஒரு சிலரையேனும் கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளது – துப்பாகிதாரி ஒருவரைக் கூட கண்டு பிடிக்க முடியாமல் போயிருக்கிறது. சுதந்திரத்துக்கு முன்னாலும் கூட இவ்வாறான சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன. அரசர்கள்கூட கொலை செய்யப்பட்டனர். எனவேதான், இலங்கையின் ஜனநாயகமும் எஞ்சியிருக்கும் அரச தலைவர்களும் அழிக்கப்படுவதற்கு இடமளிக்காமல் தமிழ், சிங்கள, முஸ்லிம் என அனைத்து மக்களும் – சகல அரசியல் கட்சிகளும் தேசிய மட்டத்தில் ஒற்றுமையாக செயல்படுவதற்கு ஜனாதிபதிரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

மத வழிபாட்டின்போது நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த சம்பவம், இலங்கையில் இது முதல் தடவையல்ல. இதற்கு முன்னர் அரந்தலாவை பிக்குகள் கொலை செய்யப்பட்டமை, தலதாமாளிகை மீதான தாக்குதல் இதே போன்று தமிழ், முஸ்லிம் மத வழிபாடு களின்போதும் தாக்குதல்களில் உயிர்கள் இழக்கப்பட்டன. அதனால் இந்த கலாசரரத்தில் இருந்து மீள்வதற்காக ஒற்றுமையாக செயல்பட முன்வருமாறு ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுக்கிறார் – என்றார்.

தொடர்புடையசெய்திகள்

இந்த ஜெ ஆர் ஜெயவர்த்தன, பிரேமதாச, காமினி ஜய விக்ரம எல்லோரும்சேர்ந்து தமிழ் மக்களை அழித்தார்கள்-அமைச்சர் சந்திரசேகர்
காணொளிகள்

இந்த ஜெ ஆர் ஜெயவர்த்தன, பிரேமதாச, காமினி ஜய விக்ரம எல்லோரும்சேர்ந்து தமிழ் மக்களை அழித்தார்கள்-அமைச்சர் சந்திரசேகர்

July 24, 2026
திருகோணமலையில் ரூ.2.5 கோடி பெறுமதியான ‘ராவண கல்’ விற்பனை முயற்சி; இருவர் கைது
செய்திகள்

திருகோணமலையில் ரூ.2.5 கோடி பெறுமதியான ‘ராவண கல்’ விற்பனை முயற்சி; இருவர் கைது

July 24, 2026
தமிழர்களுக்கு தமது பிரதேசங்களை ஆளும் உரிமை வழங்கப்பட வேண்டும்; இராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்!
செய்திகள்

தமிழர்களுக்கு தமது பிரதேசங்களை ஆளும் உரிமை வழங்கப்பட வேண்டும்; இராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்!

July 24, 2026
பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராக பிடியாணை பிறப்பிப்பு!
செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராக பிடியாணை பிறப்பிப்பு!

July 24, 2026
கோட்டாபயவின் வக்கீலாக ஆஜரானார் நாமல் ராஜபக்ஸ
செய்திகள்

கோட்டாபயவின் வக்கீலாக ஆஜரானார் நாமல் ராஜபக்ஸ

July 24, 2026
துறைமுக நகரில் கடத்தப்பட்ட சீனப் பிரஜை கொலை; சடலம் காட்டுப் பகுதியில் மீட்பு – இருவர் கைது
செய்திகள்

துறைமுக நகரில் கடத்தப்பட்ட சீனப் பிரஜை கொலை; சடலம் காட்டுப் பகுதியில் மீட்பு – இருவர் கைது

July 24, 2026
Next Post
இறந்த மீன்கள் தொடர்பில் பரிசோதனை அறிக்கை வெளியானது!

இறந்த மீன்கள் தொடர்பில் பரிசோதனை அறிக்கை வெளியானது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.