Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு ஏறாவூரில் விபத்து; இளம் குடும்பஸ்தர் பலி!

மட்டக்களப்பு ஏறாவூரில் விபத்து; இளம் குடும்பஸ்தர் பலி!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையில் ஏறாவூர் ஆறுமுகத்தான் குடியிருப்பு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளம் குடும்பஸ்தர் இன்று (11) சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து தொடர்பில் இரண்டு வடி ரக வாகனங்களின் சாரதிகள் இருவரை பொலிஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

கடந்த வெள்ளிக்கிழமை (9) பிற்பகல் இடம்பெற்ற இந்த விபத்தில் ஏறாவூர் 4ஆம் குறிச்சியைச் சேர்ந்த சண்முகராசா சுதர்ஷன் (வயது 37) என்பவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் நகைக் கடை கூலித் தொழிலாளி என்பதோடு, அவர் 4 வயது பிள்ளை மற்றும் 6 மாத குழந்தையின் தந்தையுமாவார்.

குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் வீதியால் பயணித்துக்கொண்டிருந்தபோது, வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வடி ரக வாகனத்தை கடக்க முற்பட்டுள்ளார்.

அப்போது அதன் சாரதி திடீரென வாகனத்தின் கதவை திறந்துள்ளார். கதவின் பலமான தள்ளுகையினால் வீதியில் நிலை தடுமாறி அந்த நபர் விழுந்துள்ளார்.

அவ்வேளை பின்னால் வந்த மற்றொரு வடி ரக வாகனம் வீதியில் விழுந்த நபர் மீதேறிச் சென்றுள்ளது.

இதில் படுகாயமடைந்த நபர் அங்கிருந்தவர்களால் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர், மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு சட்ட வைத்திய அதிகாரியின் உடற்கூற்றாய்வுப் பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இன்று ஐயன்கேணி மணிபுரம் பொது மயானத்தில் உடல் அடக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து ஆதாரங்கள் இருந்தால் நீதிமன்றத்திற்கு வந்து கூறுங்கள்; நளிந்த ஜயதிஸ்ஸ
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து ஆதாரங்கள் இருந்தால் நீதிமன்றத்திற்கு வந்து கூறுங்கள்; நளிந்த ஜயதிஸ்ஸ

June 14, 2026
கொழும்பில் 5,000 பரதநாட்டிய கலைஞர்களால் நிகழ்த்தப்பட்ட கின்னஸ் உலக சாதனை
செய்திகள்

கொழும்பில் 5,000 பரதநாட்டிய கலைஞர்களால் நிகழ்த்தப்பட்ட கின்னஸ் உலக சாதனை

June 14, 2026
அ.தி.மு.கவின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நடிகை கௌதமி விலகல்
அரசியல்

அ.தி.மு.கவின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நடிகை கௌதமி விலகல்

June 14, 2026
சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்படலாம்
செய்திகள்

சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்படலாம்

June 14, 2026
பிரபாகரனின் மகன் குறித்து பேசும் ஹக்கீம், 1990 ஜூன் 11-ஐ மறந்துவிட்டாரா? – ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கலீலுர் ரஹ்மான் கேள்வி
செய்திகள்

பிரபாகரனின் மகன் குறித்து பேசும் ஹக்கீம், 1990 ஜூன் 11-ஐ மறந்துவிட்டாரா? – ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கலீலுர் ரஹ்மான் கேள்வி

June 14, 2026
மட்டக்களப்பில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள திருக்குறள் மாநாடு மற்றும் வினாவிடைப் போட்டி; பதிவு செய்யும் முகவரி இணைப்பு
செய்திகள்

மட்டக்களப்பில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள திருக்குறள் மாநாடு மற்றும் வினாவிடைப் போட்டி; பதிவு செய்யும் முகவரி இணைப்பு

June 14, 2026
Next Post
சிறுவர்களுக்கு சிகரெட் விற்பனை செய்த 8 கடை உரிமையாளர்கள் கைது!

சிறுவர்களுக்கு சிகரெட் விற்பனை செய்த 8 கடை உரிமையாளர்கள் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.