Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு ஏறாவூர் கடற்கரையில் சட்ட விரோத வலைகள் மற்றும் 3 தோணிகள் கைப்பற்றப்பட்டன!

மட்டு ஏறாவூர் கடற்கரையில் சட்ட விரோத வலைகள் மற்றும் 3 தோணிகள் கைப்பற்றப்பட்டன!

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு ஏறாவூர் கடற்கரை பகுதியில் சுமார் 22 இலட்சம் ரூபாய் பெறுமதியான பெருமளவு சட்ட விரோத சுருக்குவலைகள் மற்றும் 3 தோணிகளை மீன்பிடி அதிகாரிகள் கடற்படையினருடன் இணைந்து கைப்பற்றியுள்ளதாக கடற்றொழில் நீரியல் வளங்கள் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை (25) சட்டவிரோத சுருக்கு வலைகளை கண்டுபிடிப்பதற்கான சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டபோதே இந்த வலைகளும் தோணிகளும் அதிகாரிகள் மற்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிலர் தொடர்ச்சியாக தடை செய்யப்பட்ட சட்டவிரோத வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாக மீனவர்கள் முறைப்பாடு அளித்துள்ளனர்.

அதன் அடிப்படையிலேயே கடற்றொழில் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் மீன்பிடி அதிகாரிகள் கடற்படையினருடன் இணைந்து ஏறாவூர், குடியிருப்பு கடற்கரை பகுதியை முற்றுகையிட்டுள்ளனர்.

இதன்போது கடற்கரையில் மீன்பிடிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான சட்ட விரோத வலைகளும், இரண்டரை இலட்சம் ரூபாய் பெறுமதியான 3 தோணிகளும் கைப்பற்றப்பட்டன.

கைப்பற்றப்பட்ட வலைகள், தோணிகளுக்கு எவரும் உரிமை கோராத நிலையில், அவை கல்லடியிலுள்ள மாவட்ட கடற்றொழில் நீரியல் வளங்கள் திணைக்கள காரியாலயத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட வலைகள் மற்றும் தோணிகளை நாளை திங்கட்கிழமை (26) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஒப்படைப்பதற்கான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

“தனிச் சிங்களச் சட்டம்” நிறைவேற்றப்பட்டு நேற்றுடன் 69 ஆண்டுகள் நிறைவு
செய்திகள்

“தனிச் சிங்களச் சட்டம்” நிறைவேற்றப்பட்டு நேற்றுடன் 69 ஆண்டுகள் நிறைவு

June 6, 2025
மட்டு புன்னைச்சோலை பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் எண்ணெய்க் காப்பு நிகழ்வு
காணொளிகள்

மட்டு புன்னைச்சோலை பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் எண்ணெய்க் காப்பு நிகழ்வு

June 6, 2025
மட்டு ஆரையம்பதியில் வேனும் மோட்டார்சைக்கிளும் மோதியதில் 21 வயது இளைஞன் உயிரிழப்பு
செய்திகள்

மட்டு ஆரையம்பதியில் வேனும் மோட்டார்சைக்கிளும் மோதியதில் 21 வயது இளைஞன் உயிரிழப்பு

June 6, 2025
அலாஸ்கா அருகே 3,000 வாகனங்களுடன் பயணித்த கப்பல் தீக்கிரை
உலக செய்திகள்

அலாஸ்கா அருகே 3,000 வாகனங்களுடன் பயணித்த கப்பல் தீக்கிரை

June 6, 2025
வேனை முந்திச் செல்ல முயன்றபோது எதிர் திசையில் வந்த பேருந்துடன் மோதி ஒருவர் உயிரிழப்பு
செய்திகள்

வேனை முந்திச் செல்ல முயன்றபோது எதிர் திசையில் வந்த பேருந்துடன் மோதி ஒருவர் உயிரிழப்பு

June 6, 2025
10 ரூபாய்க்காக 5 இலட்சம் ருபாய் அபராதம் செலுத்திய பல்பொருள் அங்காடி
செய்திகள்

10 ரூபாய்க்காக 5 இலட்சம் ருபாய் அபராதம் செலுத்திய பல்பொருள் அங்காடி

June 6, 2025
Next Post
01-11 ஆம் தரம் வரை கல்வி கற்கும் பாடசாலை மாணவர்களுக்கு விசேட புலமைப்பரிசில்!

01-11 ஆம் தரம் வரை கல்வி கற்கும் பாடசாலை மாணவர்களுக்கு விசேட புலமைப்பரிசில்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.