Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
01-11 ஆம் தரம் வரை கல்வி கற்கும் பாடசாலை மாணவர்களுக்கு விசேட புலமைப்பரிசில்!

01-11 ஆம் தரம் வரை கல்வி கற்கும் பாடசாலை மாணவர்களுக்கு விசேட புலமைப்பரிசில்!

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு ஊக்குவிப்புகளை வழங்கும் நோக்கில் ஜனாதிபதி நிதியம் “ஜனாதிபதி கல்வி புலமைப்பரிசில் 2024/2025” திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது.

இதன்படி, மொத்தமாக இலங்கையில் உள்ள 10,126 பாடசாலைகளையும் உள்ளடக்கிய வகையில், தரம் 01 முதல் தரம் 11 வரை கல்வி கற்கும் ஒரு இலட்சம் (100,000) மாணவர்களுக்கு, வருடாந்தம் இந்த நிதியுதவித் திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதுடன், இந்த முழுமையான திட்டத்திற்கும் 3600 மில்லியன் ரூபாவை ஜனாதிபதி நிதியம் ஒதுக்கியுள்ளது.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு, குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் குடும்பங்களில் உள்ள மாணவர்கள் எதிர்நோக்கும் பாடசாலை உபகரணங்கள், பயிற்சி புத்தகங்களைப் பெற்றுக்கொள்ளல் மற்றும் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக்கொள்ளல் போன்ற விடயங்களில் நிலவும் சிரமங்களுக்கு ஓரளவு நிவாரணம் வழங்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

ஒவ்வொரு பாடசாலையிலும் மிகக்குறைந்த வசதிகளின் கீழ் கல்வி கற்கும் திறமையான மாணவர்களைத் தெரிவு செய்து, அந்தப் பிள்ளைகளுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம் இந்நாட்டு மாணவர்களுக்கு தொடர்ச்சியான பாடசாலைக் கல்வியை வழங்கி, அதன் ஊடாக நாட்டின் மனித வளத்தை மேம்படுத்த முதலீடு செய்வதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எதிர்பார்ப்பாகும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, இந்தப் புலமைப்பரிசில் பெறுவோரைத் தெரிவு செய்யும் செயல்முறை மற்றும் அது தொடர்பான அனைத்து தகவல்களும் ஜனாதிபதி நிதியத்தின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கமான www.facebook.com/president.fund மூலம் எதிர்வரும் நாட்களில் அறிவிக்கப்படும் என அந்த பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

“தனிச் சிங்களச் சட்டம்” நிறைவேற்றப்பட்டு நேற்றுடன் 69 ஆண்டுகள் நிறைவு
செய்திகள்

“தனிச் சிங்களச் சட்டம்” நிறைவேற்றப்பட்டு நேற்றுடன் 69 ஆண்டுகள் நிறைவு

June 6, 2025
மட்டு புன்னைச்சோலை பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் எண்ணெய்க் காப்பு நிகழ்வு
காணொளிகள்

மட்டு புன்னைச்சோலை பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் எண்ணெய்க் காப்பு நிகழ்வு

June 6, 2025
மட்டு ஆரையம்பதியில் வேனும் மோட்டார்சைக்கிளும் மோதியதில் 21 வயது இளைஞன் உயிரிழப்பு
செய்திகள்

மட்டு ஆரையம்பதியில் வேனும் மோட்டார்சைக்கிளும் மோதியதில் 21 வயது இளைஞன் உயிரிழப்பு

June 6, 2025
அலாஸ்கா அருகே 3,000 வாகனங்களுடன் பயணித்த கப்பல் தீக்கிரை
உலக செய்திகள்

அலாஸ்கா அருகே 3,000 வாகனங்களுடன் பயணித்த கப்பல் தீக்கிரை

June 6, 2025
வேனை முந்திச் செல்ல முயன்றபோது எதிர் திசையில் வந்த பேருந்துடன் மோதி ஒருவர் உயிரிழப்பு
செய்திகள்

வேனை முந்திச் செல்ல முயன்றபோது எதிர் திசையில் வந்த பேருந்துடன் மோதி ஒருவர் உயிரிழப்பு

June 6, 2025
10 ரூபாய்க்காக 5 இலட்சம் ருபாய் அபராதம் செலுத்திய பல்பொருள் அங்காடி
செய்திகள்

10 ரூபாய்க்காக 5 இலட்சம் ருபாய் அபராதம் செலுத்திய பல்பொருள் அங்காடி

June 6, 2025
Next Post
06ம் தரத்திற்கு மேல் குறையப்போகும் பாடங்களின் எண்ணிக்கை!

06ம் தரத்திற்கு மேல் குறையப்போகும் பாடங்களின் எண்ணிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.