Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ரஷ்யாவில் அதிபர் தேர்தல் ஆரம்பமானது!

ரஷ்யாவில் அதிபர் தேர்தல் ஆரம்பமானது!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

உலக அரங்கில் அதிகளவில் விமர்சிக்கப்படும் நாடான ரஷ்யாவில் நேற்று (15) அதிபர் தேர்தல் ஆரம்பமாகியுள்ளது.

இம்முறை முதற்தடைவையாக அதிபர் தேர்தல் அங்கு மூன்று தினங்களுக்கு நடைபெறுகிறது. நாளை 17 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள தேர்தலில் 11.23 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்காக நாடு முழுவதும் 1 இலட்சம் வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒன்லைன் மூலம் வாக்களிக்கும் முறைமை முதற்தடவையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

சர்வதேச சட்டத்தை மீறி 2022 செப்டம்பரில் இணைக்கப்படும் என்று ரஷ்யா கூறிய நான்கு உக்ரேனிய பிராந்தியங்களிலும் வாக்களிப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேர்தலில் தற்போதைய அதிபர் விளாடிமிர் புதின் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். Nikolay Kharitonov-வின் கம்யூனிஸ்ட் கட்சி, Leonid Slutsky-யின் தேசிய சுதந்திர ஜனநாயகக் கட்சி, Vladislav Davankov-வின் புதிய மக்கள் கட்சி ஆகியவை போட்டியிடுகின்றன.

ஆனால் புதினை எதிர்த்து போட்டியிட வலுவான வேட்பாளர் இல்லை என்பதால், அவர் 5 ஆவது முறையாக அதிபராக வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது.

புதினுக்கு எதிரான தலைவர்கள் சிறைகளிலோ, வெளிநாடுகளிலோ இருப்பதாலும், உக்ரைன் போர் மற்றும் துணை இராணுவப் படையான வாக்னர் குழுவின் ஆயுதக் கிளர்ச்சிக்கு இடையிலும் புதினுக்கு மக்களிடையே அதிக ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது.

அவரை கடுமையாக விமர்சித்து வந்த எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி சிறையில் மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

2018 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் புதின் 76.7% வாக்குகள் பெற்றிருந்தார். அரசியல் சாசனத் திருத்தத்தின் படி புதினால் வரும் 2036-ஆம் ஆண்டு வரை ரஷ்ய அதிபராக பொறுப்பு வகிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

கருவாடு கிலோ விலை 4,000 வரை அதிகரிப்பு
செய்திகள்

கருவாடு கிலோ விலை 4,000 வரை அதிகரிப்பு

August 2, 2026
சிறிதரனின் செயற்பாடுகள் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்; சாணக்கியன் எச்சரிக்கை
அரசியல்

சிறிதரனின் செயற்பாடுகள் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்; சாணக்கியன் எச்சரிக்கை

August 2, 2026
புலமைப்பரிசில் மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகளுக்கு 05ஆம் திகதி முதல் தடை
செய்திகள்

புலமைப்பரிசில் மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகளுக்கு 05ஆம் திகதி முதல் தடை

August 2, 2026
யாழில் பட்டாசு வெடித்த விபத்தில் இளைஞர் உயிரிழப்பு
செய்திகள்

யாழில் பட்டாசு வெடித்த விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

August 2, 2026
மஹர சிறைச்சாலை மோதலைத் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்கு தொடர்கிறது
செய்திகள்

மஹர சிறைச்சாலை மோதலைத் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்கு தொடர்கிறது

August 2, 2026
வடக்கில் 7,606 கட்டாக்காலி நாய்களுக்கு கருத்தடை செய்ய இலக்கு
செய்திகள்

வடக்கில் 7,606 கட்டாக்காலி நாய்களுக்கு கருத்தடை செய்ய இலக்கு

August 2, 2026
Next Post
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்!

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.