Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தின் சர்வதேச மகளிர் தின நிகழ்வு!

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தின் சர்வதேச மகளிர் தின நிகழ்வு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகமானது, களுதாவளை கிராம ஆலயங்கள் மற்றும் பொது அமைப்புகளுடன் இணைந்து ஏற்பாடு செய்து நடாத்திய சர்வதேச மகளிர் தின பிரதான நிகழ்வானது, பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் தலைமையின் கீழ் களுதாவளை பிள்ளையார் ஆலய முன் வீதி வளாகத்தில் நேற்றைய தினம் (2024.03.20) மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றது.

“அவளுடைய பலம் நாட்டிற்கு முன்னேற்றம்” எனும் தொனிப்பொருளில் கொண்டாடப்படும் இவ்வருடத்திற்கான மகளிர் தின நிகழ்வில் முதன்மை அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்ட செயலாளருமாகிய திருமதி. ஜஸ்டினா யுலேக்கா முரளிதரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

பிரதான நிகழ்வினையொட்டியதாக காலை 9 மணி முதல் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பெண் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்தி பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனை நிகழ்வு இடம்பெற்றதுடன், ஓவிய காட்சிப்படுத்தலும், பிரதி விம்ப ஓவியம் வரைதல் நிகழ்வும் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச கலைஞர்களினால் பாடல், நடனம் மற்றும் நாடகம் என்பன ஆற்றுகை செய்யப்பட்டதுடன், களுவையூர் கலைக்கழகத்தினால் சரித்திர மங்கையரின் சமூக செய்தி எனும் தலைப்பிலான இயலும், இசையும் நிகழ்வானது ஆற்றுகை செய்யப்பட்டது.

பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் கலைஞர்கள் பங்குகொண்ட “தற்கால மகளிருக்காய் ….” எனும் தலைப்பிலான கருத்தாடல் களமானது அனைவரினதும் வரவேற்பை பெற்றது.

இந்த நிகழ்வானது பட்டிருப்பு கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் திருமதி வனிதா சுரேஸ் அவர்களினால் தொகுத்து வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரதேச செயலக பிரிவிலிருந்து சிறந்த பெண் தொழில் முயற்சியாளர், நடன கலை, பாரம்பரிய மருத்துவிச்சி, விளையாட்டு சாதனையாளர், சிறந்த பெண் தலைமை மாதர், மாற்றுத்திறனாளி விளையாட்டு சாதனையாளர் எனும் துறைகளின் கீழ் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு மாண்புறு மங்கையர் கெளரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் திருமதி சத்யகெளரி தரணிதரன், பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள், களுதாவளை கிராம ஆலயங்கள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்

தொடர்புடையசெய்திகள்

இலங்கை உட்பட 60 நாடுகள் மீதான ட்ரம்ப்பின் வரிகளுக்கு புதிய சவால்!
உலக செய்திகள்

இலங்கை உட்பட 60 நாடுகள் மீதான ட்ரம்ப்பின் வரிகளுக்கு புதிய சவால்!

August 4, 2026
3 மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை நீடிப்பு!
செய்திகள்

3 மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை நீடிப்பு!

August 4, 2026
நீதிபதிகள் ஓய்வு வயது திருத்தம்; இலங்கைக்கு சர்வதேச நீதிபதிகள் சங்கம் கவலை!
செய்திகள்

நீதிபதிகள் ஓய்வு வயது திருத்தம்; இலங்கைக்கு சர்வதேச நீதிபதிகள் சங்கம் கவலை!

August 4, 2026
சீரற்ற வானிலை; பரீட்சைகள் குறித்து நாளை விசேட கலந்துரையாடல்!
செய்திகள்

சீரற்ற வானிலை; பரீட்சைகள் குறித்து நாளை விசேட கலந்துரையாடல்!

August 4, 2026
விபத்துக்களை குறைக்க மோட்டார் சைக்கிள்களுக்கு பிரத்யேகப் பாதை!
செய்திகள்

விபத்துக்களை குறைக்க மோட்டார் சைக்கிள்களுக்கு பிரத்யேகப் பாதை!

August 4, 2026
சீரற்ற வானிலை தாக்கம்; சப்ரகமுவ, கண்டி, நுவரெலியாவில் 6 பேர் உயிரிழப்பு – ஒருவர் மாயம்!
செய்திகள்

சீரற்ற வானிலை தாக்கம்; சப்ரகமுவ, கண்டி, நுவரெலியாவில் 6 பேர் உயிரிழப்பு – ஒருவர் மாயம்!

August 4, 2026
Next Post
களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் விசேட நிகழ்வு!

களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் விசேட நிகழ்வு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.