அரசியல் காரணங்களுக்காக சிறையில் இருக்கும் தனது தாயாரான தயாபரராஜ் உதயகலாவை அவரது உடல்நலம் கருதியும், சிறுவர்களான எமது நலன்கருதியும் சிறையிலிருந்து வெளியில் வருவதற்கான வாய்ப்பை ஜனாதிபதி ஏற்படுத்தி தரவேண்டும் என குறித்த பெண்ணின் மகள் டிலானி தயாபரராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்று (21) தனது பேத்தியாரான அருனோதயனாதன் ரஜனியுடன் ஊடக சந்திப்பை முன்னெடுத்திருந்த போதே மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்
மேலும் கூறுகையில்,

சர்வமக்கள் கட்சியின் உருவாக்கத்தாலும், பிள்ளையானுடன் ஏற்பட்ட முறண்பாடுகளால் எனது தயார் தண்டனைக் கைதியாக சிறையில் இருக்கின்றார்.
எமது தாயார் அரசியல் சூழ்ச்சி காரணமாக சிறையில் இருப்பதால் நான்கு சகோதரர்களும் பாட்டியின் பராமரிப்பில் தற்போது பல அசௌகரியங்களை சந்தித்தி வருகின்றோம் .
இந்நேரம் சிறையிலிருக்கும் எமது தாயார் குற்றம் செய்யாது சிறையில் இருப்பதால் பல்வேறு உடல் உபாதைகளுக்கும் மன உழைச்சலுக்கும் உள்ளாகி மருத்துவ வசதி கூட கிடையாத நிலையில் இருக்கின்றார்.
இந்த நிலை அவரது உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்துவதாக இருக்கின்றது.
அந்தவகையில் எமது குடும்ப நிலையையும் பிள்ளைகளான எமது நிலையையும் கருத்தில் கொண்டு தாயாரை மனிதாபிமானமான நடவடிக்கையாக விடுவிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதேசமயம் உதயகலா பிள்ளையானின் சதியால் சிறை செல்லவில்லை எனவும், வெளிநாடு அனுப்புவதாக கூறி பல பேரிடம் பணம் வாங்கி ஏமாற்றியதால் தான் சிறையில் அடைக்கப்பட்டார் எனவும் அப்போதைய ஊடகங்களில் செய்திகள் வந்திருந்ததுடன், தற்போது முகப்புத்தகங்களில் இது தொடர்பாக உதயகலாவின் கணவரின் பெயர் குறிப்பிடப்பட்ட வங்கி பற்றுசீட்டுகளும் வெளிவந்த வண்ணம் உள்ளது.

