Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு குருக்கள்மடம் ஸ்ரீ சத்ய சாய் சஞ்ஜீவனி வைத்தியசாலைக்கு அலிஷாஹிர் மௌலானா எம்.பி விஜயம்!

மட்டு குருக்கள்மடம் ஸ்ரீ சத்ய சாய் சஞ்ஜீவனி வைத்தியசாலைக்கு அலிஷாஹிர் மௌலானா எம்.பி விஜயம்!

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள்

கிழக்கில் மனிதாபிமான அடிப்படையில் எவ்வித இன மத பேதங்களும் இன்றி இருதய நோய் தொடர்பான சிகிச்சைகளை எவ்வித கட்டணங்களும் இன்றி முற்றிலும் இலவசமாக வழங்கி வருகின்ற மட்டக்களப்பு – குருக்கள்மடம் பகுதியில் அமைந்துள்ள ஶ்ரீ சத்ய சாய் சஞ்ஜீவனி வைத்தியசாலையின் உயர்தர சேவைகளை பாராட்டும் வகையில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா அவர்கள் இன்று (29) வியாழக்கிழமை அங்கு நேரடி விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார் .

இதன் போது இந்தியாவை சேர்ந்த சத்குரு ஶ்ரீ மதுசன் சாய் அவர்களது வழிகாட்டுதலில் கீழ் செயலாற்றும் குறித்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் Dr. சுந்தரேசன் மற்றும் வைத்தியசாலையின் முகாமைத்துவ பணிப்பாளர் ரமேஷ் ராவ் தலைமையிலான குழுவினருக்கும், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இருத நோய் சிகிச்சை பிரிவின் வைத்திய நிபுணர்கள், ஊழியர்களின் இந்த பணிக்காக நாடாளுமன்ற உறுப்பினர் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் பிரதிநிதி எனும் அடிப்படையில் தனது நன்றியினையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொண்டார்.

அத்துடன் ஶ்ரீ சத்ய சாய் சஞ்ஜீவனி வைத்தியசாலையின் நாளாந்த மனிதாபிமான மருத்துவ சேவைகள் மற்றும் அதி நவீன வசதிகள் கொண்டதாக அமையப்பெற்றுள்ள இருதய நோய் சத்திர சிகிச்சை கூடம் என்பவற்றையும் பார்வையிட்டார்.

இதன்போது வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் Dr. சுந்தரேசன் , பணிப்பாளர் Dr. ரமேஷ் ராவ், வைத்தியசாலையின் நிருவாக அதிகாரி பிரதீபன் , கதிரியல் பிரிவு உத்தியோகத்தர் இக்ராம் , உட்பட வைத்தியசாலையின் தாதியர்கள் , ஊழியர்கள் பிரசன்னமாகி இருந்தனர்.

சுமார் 450 மில்லியன் பெறுமதியான நவீன இயந்திரத்துடன் சுமார் 1500 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்டு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் முற்றிலும் இலவசமாக இருதய நோயாளர்களின் நலன்கருதி சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதுடன் இதுவரை சுமார் 700 இற்கும் அதிகமான இருதய நோயாளர்களுக்கு அஞ்சியோ சோதனைகள் , மற்றும் அவர்களது இருதய செயற்பாட்டிற்கு அவசியமான ஸ்டென்ட் பொருத்தப்பட்டுள்ளது.

அத்துடன் விரைவில் பெரியவர்களுக்கான இருதய சத்திர சிகிச்சைகள் எவ்வித கட்டணங்களும் இன்றி முற்றிலும் இலவசமாக முன்னெடுக்கப்பட உள்ளதுடன் , ஏற்கனவே 9 குழந்தைகளுக்கு இருதய அறுவை சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அவர்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர்.

அதேசமயம் இதற்கு முன்னர் கிழக்கை சேர்ந்த நோயாளர்கள் கொழும்பு , யாழ்ப்பாணம் , பொலன்னறுவை போன்ற தூரப் பிரதேசங்களுக்கு பயணித்து குறித்த சிகிச்சையினை சிரமங்களுடன் சென்று அரச வைத்தியசாலைகளில் பெற்று வந்த அதேவேளை பல இலட்சங்கள் செலவில் தனியார் வைத்தியசாலைகளில் மேற்கொண்டு வந்த நிலையிலேயே இப்பகுதி மக்களுக்காக குறித்த இலவச வைத்திய சேவை ஶ்ரீ சத்ய சாய் சஞ்ஜீவனி வைத்தியசாலையின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பித்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

டுபாயிலுள்ள மெரினா பகுதியில் 67 மாடி குடியிருப்பில் பாரிய தீ விபத்து
உலக செய்திகள்

டுபாயிலுள்ள மெரினா பகுதியில் 67 மாடி குடியிருப்பில் பாரிய தீ விபத்து

June 14, 2025
அஸ்வெசும பண மோசடி செய்தவருக்கு விளக்கமறியல்
செய்திகள்

அஸ்வெசும பண மோசடி செய்தவருக்கு விளக்கமறியல்

June 14, 2025
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை
செய்திகள்

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை

June 14, 2025
மீண்டும் தினசரி இயங்கவுள்ள கொழும்பு கோட்டை – காங்கேசன்துறை அதிவேக ரயில் சேவை
செய்திகள்

மீண்டும் தினசரி இயங்கவுள்ள கொழும்பு கோட்டை – காங்கேசன்துறை அதிவேக ரயில் சேவை

June 14, 2025
ராகமையில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழப்பு
செய்திகள்

ராகமையில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழப்பு

June 14, 2025
சிரற்ற காலநிலை காரணமாக இந்திய – இலங்கை கப்பல் சேவை இடைநிறுத்தம்
செய்திகள்

சிரற்ற காலநிலை காரணமாக இந்திய – இலங்கை கப்பல் சேவை இடைநிறுத்தம்

June 14, 2025
Next Post
அரச வேலைக்கான ஆட்சேர்ப்பு தொடர்பில் வெளியான செய்தி!

அரச வேலைக்கான ஆட்சேர்ப்பு தொடர்பில் வெளியான செய்தி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.