டுபாயில் உள்ள மெரினா பகுதியில் அமைந்துள்ள 67 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் இன்று (14) பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தீ விபத்து ஏற்பட்ட குடியிருப்பு கட்டிடத்தில் மொத்தம் உள்ள 764 வீடுகளில் உள்ள நிலையில், அந்த கட்டிடத்தில் இருந்த 3,820 பேரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். சுமார் 6 மணி நேரம் நீண்ட போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக டுபாய் சிவில் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.