ராகமை, வல்பொல பகுதியில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் 26 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.
நேற்று இரவு ஒரு வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த ஒரு குழு, தந்தை மற்றும் அவரது இரண்டு மகன்களை கூரிய ஆயுதங்களால் தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இரு தரப்பினருக்கும் இடையிலான நிதித் தகராறில் ஏற்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவரும் காயமடைந்தார்.

காயமடைந்த அனைவரும் தற்போது ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
முக்கிய சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.