Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தமிழரைக் களமிறக்குவது இனவாதத்தைத் தூண்டும் செயல்; சுமந்திரன் சுட்டிக்காட்டு!

தமிழரைக் களமிறக்குவது இனவாதத்தைத் தூண்டும் செயல்; சுமந்திரன் சுட்டிக்காட்டு!

2 years ago
in அரசியல், செய்திகள்

”தமிழ் பொது வேட்பாளரைக் களமிறக்குவது பெரும்பான்மை தரப்பில் இனவாதத்தைத் தூண்டும் செயற்பாடாகும்” என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சியின் வடமராட்சிக் கிளை அலுவலகத்தில் நேற்றைய தினம் (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” இந்த ஆண்டு, தேர்தல்கள் ஆண்டு என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையினால் இந்த ஆண்டிலே இந்தத் தேர்தல்கள் மூலமாக மாற்றம் ஒன்று ஏற்பட வேண்டும் என நாங்கள் பிரார்த்திப்போம்.

அது உண்மையான பாரிய மாற்றமாக இருக்க வேண்டும். ஆட்சி முறையிலும் நாட்டினுடைய சரித்திரத்திலும் உண்மையான மாற்றம் ஏற்பட வேண்டும்.

அரசியல் உரிமைகள் அனைவரினதும் கைகளுக்கும் கிடைக்க வேண்டும். ஒவ்வொரு மக்களும் தங்களுடைய வாழ்க்கையைத் தாங்களே தீர்மானிக்கின்ற அந்த ஆட்சி முறைமை மாற்றம் ஏற்பட வேண்டும். அதுதான் உண்மையான மக்கள் ஆட்சி. அப்படியான ஒரு மாற்றத்தை நாங்கள் கொண்டுவர வேண்டும்.

தேர்தல்கள் வருகின்ற போது பலவிதமான குழப்பங்கள் மக்கள் மத்தியில் ஏற்படுவதுண்டு. பல பல வித்தியாசமான சிந்தனைகள் எல்லாம் உட்புகுத்தப்படுவதுண்டு. ஆனால், ஊழலற்ற உண்மையாக மக்களை ஆட்சி செய்கின்ற மாற்றம் ஏற்படவேண்டும். எந்த இனத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர்கள் தங்களுடைய தலைவிதியை நிர்ணயிக்கத்தக்க வண்ணமாக ஆட்சி முறையில் மாற்றம் ஏற்பட வேண்டும்.

ஜனாதிபதித் தேர்தல் ஒரு மாற்றத்துக்கான தேர்தல். இதனை இலாவகமாக நாம் கையாள வேண்டும். தமிழ்ப் பொது வேட்பாளர் ஜி.ஜி. பொன்னம்பலம் முதல் எம்.கே. சிவாஜிலிங்கம் வரை என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். தமிழ்ப் பொது வேட்பாளரைக் களமிறக்குவது சிங்களத் தரப்பில் இனவாதத்தைத் தூண்டும் செயற்பாடாகவே பார்க்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

பெரிய வெங்காயத் தேவையில் 90% இறக்குமதியை சார்ந்துள்ளது இலங்கை; அமைச்சர் வசந்த சமரசிங்க!
செய்திகள்

பெரிய வெங்காயத் தேவையில் 90% இறக்குமதியை சார்ந்துள்ளது இலங்கை; அமைச்சர் வசந்த சமரசிங்க!

August 6, 2026
கல்முனையில் குவியும் குப்பைகள்; உடனடி நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை!
செய்திகள்

கல்முனையில் குவியும் குப்பைகள்; உடனடி நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை!

August 6, 2026
பரீட்சைக் கால இடர்களை அறிவிக்க 5 புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!
செய்திகள்

பரீட்சைக் கால இடர்களை அறிவிக்க 5 புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

August 6, 2026
‘L’ பலகை வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலையில் செல்ல தடை; பொலிஸார்  எச்சரிக்கை!
செய்திகள்

‘L’ பலகை வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலையில் செல்ல தடை; பொலிஸார் எச்சரிக்கை!

August 6, 2026
கிழக்குக் கடற்பரப்பில் பவளப்பாறைகள் தொடர்பாக விரிவான ஆய்வு!
செய்திகள்

கிழக்குக் கடற்பரப்பில் பவளப்பாறைகள் தொடர்பாக விரிவான ஆய்வு!

August 6, 2026
பாடசாலை விடுமுறை தொடர்பில் வௌியான அறிவிப்பு!
செய்திகள்

பாடசாலை விடுமுறை தொடர்பில் வௌியான அறிவிப்பு!

August 6, 2026
Next Post
தலவாக்கலை பொலிஸ் பிரிவில் ஆணொருவரின் சடலம் மீட்பு!

தலவாக்கலை பொலிஸ் பிரிவில் ஆணொருவரின் சடலம் மீட்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.