Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் அருட்திரு காமினி பெர்னாண்டோ அவர்களின் மேலுமொரு குற்றச்சாட்டு; நடவடிக்கை எடுக்க தயங்கும் அரச தரப்பு!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் அருட்திரு காமினி பெர்னாண்டோ அவர்களின் மேலுமொரு குற்றச்சாட்டு; நடவடிக்கை எடுக்க தயங்கும் அரச தரப்பு!

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் சதி குறித்த புதிய பல தகவல்களை ஆதாரங்களுடன் கத்தோலிக்க திருச்சபையை சேர்ந்த
சிறில் காமினி பெர்னாண்டோ அவர்கள் CID யிடம் முன்வைத்து இருக்கின்றார் .

தாக்குதல்தாரிகளுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த ஒருவரின் Internet Protocol (IP) address கண்டுபிடிக்கப்பட்ட போதும் அந்த நபரை கைது செய்ய இராணுவ புலனாய்வு பிரிவு பணிப்பாளர் Brigadier Chula Kodithuwakku அனுமதி மறுத்தது தொடர்பாக விசாரிக்க வேண்டும் என சொல்லி இருக்கின்றார்.

குறிப்பாக மேற்படி (IP) address பிள்ளையான் சகிதம் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கிற்காக மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த பிள்ளையானின் கூட்டாளியான கலீல் என்கிற புலனாய்வு அதிகாரியின் மகனின் பாவனையிலிருந்து தெளிவாக அடையாளம் காணப்பட்ட போதும் Brigadier Chula Kodithuwakku தலையீடுகளால்அவன் கைது செய்யப்படவில்லை என்பதை அம்பலப்படுத்தி இருக்கின்றார்.

குறிப்பிட்ட காலத்தில் கலீல் மகன் Brigadier Chula Kodithuwakku யின் கீழ் புலனாய்வு பிரிவு பணியாற்றி கொண்டு இருந்ததையும் வெளிப்படுத்தி உள்ளார்.

அதே போன்று தெஹிவளையில் உயிரிழந்த Jameel Mohamed என்கிற குண்டுதாரி அதற்கு முன் Taj Samudra hotel இல் வெடிக்கத் தயாராகவிருந்த நிலையில் அவனை தொலை பேசிமூலம் அங்கிருந்து வெளியேற்றிய கேணல் அன்சார் என்கிற புலனாய்வு அதிகாரியை அம்பலபடுத்தி விசாரிக்க கோரிக்கை முன்வைத்துள்ளார்.

வவுணதீவு நகரில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் சஹ்ரான் இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தவறான அறிக்கைகளை கேணல் கெலும் மத்துமகே என்கிற புலனாய்வு அதிகாரி யாரின் நலன்களுக்காக முன்வைத்தார் என அவரை அம்பலபடுத்தி விசாரிக்க கோரியுள்ளார்.

இந்த சம்பவத்தில் விசாரணைகளை தவறாக வழிநடத்த புலனாய்வு பிரிவுகள் DMI, SIS முயற்சித்தது குறித்த பல ஆதாரங்களை முன் வைத்து அது தொடர்பாகவும் கேள்வி எழுப்பி இருக்கின்றார்.

அதே போல Taj Samudra hotel குண்டுதாரியான Jameel , Hotel ஐ விட்டு வெளியேறி தனது வீட்டிற்கும் தனது தாய் வீட்டிற்கும் சென்ற போது கலீல் மகன் உட்பட்ட இராணுவ புலனாய்வு அதிகாரிகள் குழுவொன்று அவன் வீட்டுக்குச்சென்று Jameel பற்றிய தகவல்களை கேட்டறிந்தது மட்டுமல்லாமல், அவர்களை அங்கு அனுப்பிய அதிகாரி குறித்தும் விசாரிக்கப்படவில்லை என்பதையும் அம்பலபடுத்தி இருக்கின்றார்.

குறிப்பாக மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே பிள்ளையான் குழுவின் ஆசாத் மௌலானாக்குவுக்கு Taj Samudra hotel க்கு சென்று Jameel அழைத்து வர உத்தரவு பிறப்பித்தது தொடர்பாக விசாரிக்கப்படவில்லை என்பதை கோடுகாட்டி விசாரிக்க சொல்லி இருக்கின்றார்.

ஆசாத் மௌலானாவின் வாக்குமூலத்தின் படி சுரேஷ்சாலேக்கும் சஹாரானுக்கும் இடையிலான புத்தளத்தில் நடந்தாக சொல்லப்படும் சந்திப்பு தொடர்பாக விசாரிக்கப்படவில்லை என்பதையும் அம்பலபடுத்தி உள்ளார், சஹாரான் மனைவி Hadiya தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்ட மிக முக்கிய புள்ளியாக அடையாளம் Abu Hind யிடம் எதுவித விசாரணைகளும் நடத்தப்படவில்லை என்பதையும் சொல்லி உள்ளார்.

மேற்படி பரபரப்புக்கு மத்தியில் உண்மையில் இன்றுடன் ஈஸ்டர் தாக்குதல்கள் நடத்தப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

இலங்கையின் முன்னாள் சட்ட மா அதிபர் ஈஸ்டர் 21 தாக்குதல் ஒரு சதி என்பதை உறுதி செய்கின்றார்.

குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் ரவி செனவிரத்ன,ஷானி அபேசேகர நிசாந்த சில்வா ஆகியோர் மேற்படி சதியில் இலங்கை இராணுவ புலனாய்வு பிரிவிற்கு தொடர்பு இருந்ததாக சொல்லுகின்றார்கள்
விசேடமாக பிள்ளையான் குழுவும் சஹ்ரான குழுவினரும் இராணுவ புலனாய்வு பிரிவில் இருந்ததாக உறுதி செய்கின்றார்கள்.

இவர்களை சுரேஷ் சாலே வழிநடாத்தியதாக தெளிவுபடுத்துகின்றார்கள்.இப்போதுசிறில் காமினி பெர்னாண்டோ 8 புதிய தகவல்களை பல ஆதாரங்களுடன் முன்வைத்துள்ளார்.

ஆனால் இலங்கையின் குற்றவியல் சட்டக் கட்டமைப்புக்கு மேற்படி தாக்குதல்களுக்குக் காரணமான சூத்திர தாரிகளை இதுவரை விசாரிக்க கூட முடியவில்லை, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியையும் பெற்று கொடுக்க முடியவில்லை.

அதேசமயம் ஏற்கனவே பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் இது குறித்து குறிப்பிடுகையில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பிலும், அது குறித்த விசாரணைகள் தொடர்பிலும் தன்னை ஏமாற்றிவிட்டார் என்று குற்றம்சாட்டி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

நாய் கடித்த பெண்ணுக்கு 40 ஆயிரம் ரூபா அபராதம் செலுத்திய உரிமையாளர்; மட்டக்களப்பில் சம்பவம்
செய்திகள்

நாய் கடித்த பெண்ணுக்கு 40 ஆயிரம் ரூபா அபராதம் செலுத்திய உரிமையாளர்; மட்டக்களப்பில் சம்பவம்

June 15, 2025
நாட்டின் சில கரையோரப் பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை
செய்திகள்

நாட்டின் சில கரையோரப் பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை

June 15, 2025
பசுவின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த கயிற்றில் சிக்கி 9 வயது சிறுவன் உயிரிழப்பு
செய்திகள்

பசுவின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த கயிற்றில் சிக்கி 9 வயது சிறுவன் உயிரிழப்பு

June 15, 2025
முன்னாள் அமைச்சர் தயா கமகேவின் மூன்று நிறுவனங்களை ஏலத்தில் விற்க உத்தரவு
செய்திகள்

முன்னாள் அமைச்சர் தயா கமகேவின் மூன்று நிறுவனங்களை ஏலத்தில் விற்க உத்தரவு

June 15, 2025
தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து பயணிக்க தமிழரசுக் கட்சி முன்வர வேண்டும் ; ஆனந்தசங்கரி
அரசியல்

தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து பயணிக்க தமிழரசுக் கட்சி முன்வர வேண்டும் ; ஆனந்தசங்கரி

June 15, 2025
மொரட்டுவையில் லிப்ட் இடிந்து விழுந்ததில் இளைஞன் பலி
செய்திகள்

மொரட்டுவையில் லிப்ட் இடிந்து விழுந்ததில் இளைஞன் பலி

June 15, 2025
Next Post
பொது வேட்பாளர் என்ற கருத்து வெற்றிபெற முடியாத திட்டமிடல்; இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன்!

பொது வேட்பாளர் என்ற கருத்து வெற்றிபெற முடியாத திட்டமிடல்; இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.