பசு ஒன்றின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த கயிற்றில் சிக்கி 9 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
அனுராதபுரம், விஹாரபலுகம, வித்யாராஜ பாடசாலையில், 4 ஆம் வகுப்பில் கற்கும் சிறுவனே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

பக்கத்து வீட்டில் கட்டப்பட்டிருந்த பசுவுடன் சில நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த போது, அந்த பசு திடீரென கிளர்ந்தெழுந்து வீதியில் வேகமாக ஓடியுள்ளது.
இதன்போது, பசுவின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த கயிற்றில் குறித்த சிறுவன் சிக்கி பல மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் அந்த சிறுவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டு அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், தீவிர சிகிச்சைக்கு பின்னர் அவர் நேற்று உயிரிழந்துள்ளார்.