மொரட்டுவையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பணிபுரிந்த இளைஞர் ஒருவர், ஹோட்டலின் உள்ளக பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் லிப்ட் இடிந்து விழுந்ததில் சிக்கி இளைஞரொருவர் உயிரிழந்ததாக மொரட்டுவை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர், பாணந்துறை, அருக்கொட பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய ரவிந்து பீரிஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நான்கு மாடிக் கட்டடமாக உள்ள குறித்த ஹோட்டலின் மேல் மாடிக்கு கோப்பைகள் மற்றும் தட்டுகளை எடுத்துச் சென்றபோது, லிப்ட் அவர்மீது இடிந்து விழுந்ததாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.