Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு விபுலானந்தா இசை நடனக்கல்லூரியின் ஓய்வுபெற்ற முன்னாள் விரிவுரையாளருக்கு கௌரவிப்பு நிகழ்வு!

மட்டு விபுலானந்தா இசை நடனக்கல்லூரியின் ஓய்வுபெற்ற முன்னாள் விரிவுரையாளருக்கு கௌரவிப்பு நிகழ்வு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு விபுலானந்தா இசை நடனக்கல்லூரியின் வளர்ச்சிக்கு பெரும்பணியாற்றி ஓய்வுபெற்ற முன்னாள் விரிவுரையாளரும் கல்லூரியின் முன்னாள் அதிபருமான கலாபூசணம் திருமதி இராஜேஸ்வரி தட்சணாமூர்த்தி அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (20) நடைபெற்றது.

விபுலானந்தா இசை நடனக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட காலம் தொடக்கம் தனது திறமையினாலும் ஆற்றலினாலும் பெருமளவான கல்வியியலாளர்களை உருவாக்கிய பெருமையினை கௌரவிக்கும் வகையில் வாழும்போதே வாழ்த்துவோம் என்னும் தொனிப்பொருளில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

விபுலானந்தா இசை நடனக்கல்லூரியின் பழைய மாணவர்கள் இணைந்து நடாத்திய இந்த நிகழ்வு மட்டக்களப்பு கல்லடியில் உள்ள விபுலானந்தர் மணிமண்டபத்தில் நடைபெற்றது.

விபுலானந்தா இசை நடனக்கல்லூரியின் பழைய மாணவியும் பட்டிருப்பு கல்வி வலய இசைத்துறை சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் திருமதி டேசிராணி இராஜகுமாரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ஆன்மீக அதிதியாக மட்டக்களப்பு இராம கிருஸ்ணமிசன் பொதுமுகாமையாளர் ஸ்ரீமத் நீலமாதவானந்தா ஜி மகராஜ் கலந்துகொண்டதுடன், முதன்மை விருந்தினராக கிழக்கு பல்கலைக்கழக வேந்தர் ஓய்வுநிலை பேராசிரியர் மா.செல்வராஜா கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதிகளாக இந்துக்கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் முன்னாள் உதவி பணிப்பாளர் எஸ்.தெய்வநாயகம்,கிழக்கு பல்கலைக்கழக இந்து நாகரிகத்துறை தலைவர் பேராசிரியர் திருமதி சாந்தி கேசவன்,பேராசிரியர் சி.மௌனகுரு, விவேகாந்தா மகளிர் கல்லூரியின் முன்னாள் அதிபர் திருமதி திலகவதி ஹரிதாஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது சுவாமி விபுலானந்தரின் சமாதிக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டு வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டதை தொடர்;ந்து மணிமண்டபத்தில் நிகழ்வுகள் நடைபெற்றது.

ஓய்வுபெற்ற முன்னாள் விரிவுரையாளரும் கல்லூரியின் முன்னாள் அதிபருமான கலாபூசணம் திருமதி இராஜேஸ்வரி தட்சணாமூர்த்தி அவர்களை கௌரவிக்கும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்ததுடன் அவரது பழைய மாணவர்களினால் பாதபூஜை செய்யப்பட்டு அவரை கௌரவிக்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

தொடர்புடையசெய்திகள்

நாட்டில் தொடரும் சிறைக்கலவரங்கள்; முப்படையினருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!
செய்திகள்

நாட்டில் தொடரும் சிறைக்கலவரங்கள்; முப்படையினருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

August 7, 2026
மட்டக்களப்பில் புழுக்கள் மற்றும் பூஞ்சணம் பிடித்த பிஸ்கட்டுகள் பறிமுதல்; ரூ.46,000 அபராதம்!
செய்திகள்

மட்டக்களப்பில் புழுக்கள் மற்றும் பூஞ்சணம் பிடித்த பிஸ்கட்டுகள் பறிமுதல்; ரூ.46,000 அபராதம்!

August 7, 2026
மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி பலத்த பாதுகாப்பு!
செய்திகள்

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி பலத்த பாதுகாப்பு!

August 7, 2026
நிர்ணய விலையை மீறி அரிசி விற்பனை; வவுனியா வர்த்தகருக்கு ரூ.1 இலட்சம் அபராதம்!
செய்திகள்

நிர்ணய விலையை மீறி அரிசி விற்பனை; வவுனியா வர்த்தகருக்கு ரூ.1 இலட்சம் அபராதம்!

August 7, 2026
அரச அதிகாரிகளின் சொத்து விபரங்களுக்கு வரையறை
செய்திகள்

அரச அதிகாரிகளின் சொத்து விபரங்களுக்கு வரையறை

August 7, 2026
அரசின் தீர்மானத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டது ரணில் தரப்பு
செய்திகள்

அரசின் தீர்மானத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டது ரணில் தரப்பு

August 7, 2026
Next Post
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு ஜனாதிபதியின் செய்தி!

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு ஜனாதிபதியின் செய்தி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.