பொசன் வாரத்தில் பொலன்னறுவைக்கு யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்காக அவசர தொடர்பு எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அனுராதபுரத்தில் உள்ள பொசன் நிகழ்வுக் குழு தெரிவித்துள்ளது.
ஏதேனும் அவசர சூழ்நிலைகள் ஏற்பட்டால், யாத்ரீகர்கள் பின்வரும் எண்களைத் தொடர்பு கொள்ளுமாறு அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்:
025-3707955
025-3700371

இந்த ஹொட்லைன் சேவை இன்று ஜூன் 9 ஆம் திகதி மாலை 6.00 மணி முதல் ஜூன் 11 ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை செயல்படும். அனைத்து பக்தர்களும் தங்கள் மத அனுஷ்டானங்களின் போது ஏதேனும் உதவி தேவைப்பட்டால் எண்களை அணுகுமாறும், தொடர்பு கொள்ளுமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.
இதற்கிடையில், பொசன் வார கொண்டாட்டங்களுக்கு அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், ஜூன் 7 முதல் ஜூன் 12 வரை அனுராதபுரம் மற்றும் மிஹிந்தலையில் உள்ள 12 பாடசாலைகளுக்கு தற்காலிகமாக விடுமுறை அளிக்கப்படுவதாக வடமத்திய மாகாண கல்வித் திணைக்களம் அறிவித்துள்ளது.
இலங்கையில் பௌத்தம் அறிமுகப்படுத்தப்பட்டதை நினைவுகூரும் பொசன் வாரம் ஜூன் 7 முதல் ஜூன் 13 வரை நடைபெறுவதால், புனிதப் பகுதிகளில் நெரிசலைக் குறைக்கவும், தளவாட சவால்களை நிர்வகிக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டது.