Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடத்தியவர்களை சிறையில் போடவேண்டும்; விமலுடன் சேர்ந்து சரத்வீரசேகர கூறுகிறார்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடத்தியவர்களை சிறையில் போடவேண்டும்; விமலுடன் சேர்ந்து சரத்வீரசேகர கூறுகிறார்!

2 years ago
in முக்கிய செய்திகள்

“முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்ற பெயரில் புலிப் பயங்கரவாதிகளை நினைவுகூருகின்றனர். வடக்கு – கிழக்கில் நினைவேந்தல் நடத்தியவர்களையே கைது செய்து சிறையில் போட வேண்டும். இந்தநிலையில் கொழும்பில் நினைவேந்தல் நடத்த இவர்களுக்கு யார் அனுமதி கொடுத்தது? இவர்கள் இவ்வாறு செய்வதை நாம் கைகட்டி வேடிக்கை பார்க்கோம்.” – இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச மற்றும் சரத் வீரசேகர ஆகியோர் தெரிவித்தனர்.

கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு கடைப்பிடிக்கப்பட்ட போது அதற்கு எதிர்ப்பு வெளியிட்டமை தொடர்பில் கேட்ட போதே அவர்கள் மேற்கண்டவாறு பதிலளித்தனர்.

அவர்களின் கருத்துக்கள் வருமாறு:-

சரத் வீரசேகர

“நினைவேந்தல் நிகழ்வுகளை தமிழ் மக்கள் வடக்கு – கிழக்கில் நடத்துவதே குற்றம். இந்தநிலையில் அந்த நிகழ்வை தெற்கில் நடத்த தமிழர்களுக்கு அனுமதியைக் கொடுத்தது யார்?

நினைவேந்தல் என்ற பெயரில் புலிப் பயங்கரவாதிகளையே தமிழ் மக்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். இந்த நிகழ்வை அவர்கள் நாடெங்கும் பகிரங்கமாக நடத்த முற்படுவதை அனுமதிக்க முடியாது.

கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை நடத்தியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதேவேளை வடக்கு – கிழக்கு உட்பட நாட்டின் எந்தப் பகுதிகளிலும் நினைவேந்தல் நிகழ்வை தமிழ் மக்கள் பகிரங்கமாக நடத்துவதை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்.

தமிழ் மக்கள் விரும்பினால் போரில் உயிரிழந்த தமது உறவினர்களை தத்தமது வீடுகளில் நினைவேந்தட்டும்.” – என்றார்.

விமல் வீரவன்ச

“இறுதிப் போரில் உயிரிழந்த புலிகளை இந்த முறை வடக்கிலும், கிழக்கிலும், கொழும்பிலும் நினைவேந்திய அனைவருக்கும் எதிராக சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

நல்லாட்சி என்ற பெயரில் நடத்தப்பட்ட ஊழல், மோசடி ஆட்சியால் புலிகளை நினைவேந்த அரசு அனுமதி வழங்கியிருந்தது. அந்த நல்லாட்சியின் பிதாமகன்களில் ஒருவரான ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான தற்போதைய அரசு புலிகளை எந்தப் பகுதிகளிலும் சுதந்திரமாக நினைவேந்துவதற்கு இம்முறை அனுமதி வழங்கியுள்ளது.

இந்த அனுமதியை வழங்கியது யார்? அமைச்சரவை வழங்கியதா அல்லது நாடாளுமன்றம் வழங்கியதா? விசித்திரமான இந்த ஆட்சியில் எதுவும் நடக்கலாம். ஆனால், நாங்கள் கைகட்டி வேடிக்கை பார்க்கமாட்டோம் என்பதை ஆட்சியாளர்களிடம் தெரிவித்துக்கொள்கின்றோம். பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு என்பது ஜனாதிபதிக்கு விளங்கும்.” – என்றார்.

தொடர்புடையசெய்திகள்

இந்த ஆண்டு நடந்த வீதி விபத்துகளில் மாத்திரம் 957 பேர் உயிரிழப்பு
செய்திகள்

இந்த ஆண்டு நடந்த வீதி விபத்துகளில் மாத்திரம் 957 பேர் உயிரிழப்பு

May 15, 2025
ஹட்டன் பிரதான வீதியில் எரிபொருள் வாகனம் விபத்து- கசிந்த எரிபொருளை பிடிக்க முண்டியடித்த மக்கள்
செய்திகள்

ஹட்டன் பிரதான வீதியில் எரிபொருள் வாகனம் விபத்து- கசிந்த எரிபொருளை பிடிக்க முண்டியடித்த மக்கள்

May 15, 2025
தமிழர் இனப்படுகொலைக்கான நினைவுத்தூபியை எதிர்த்தவர்களுக்கு பிரம்டன் மேயர் பதிலடி
செய்திகள்

தமிழர் இனப்படுகொலைக்கான நினைவுத்தூபியை எதிர்த்தவர்களுக்கு பிரம்டன் மேயர் பதிலடி

May 15, 2025
மில்லியன் பெறுமதியான வலம்புரி சங்குகளுடன் நால்வர் கைது
செய்திகள்

மில்லியன் பெறுமதியான வலம்புரி சங்குகளுடன் நால்வர் கைது

May 15, 2025
தனக்கு வாக்களிக்காததால் முதியோர் கொடுப்பனவை தடுத்த உள்ளுராட்சி வேட்பாளர்; முதியவருக்கு கொடுப்பனவை வழங்க மறுத்த அஞ்சல் அலுவலக உத்தியோகத்தர்கள்
காணொளிகள்

தனக்கு வாக்களிக்காததால் முதியோர் கொடுப்பனவை தடுத்த உள்ளுராட்சி வேட்பாளர்; முதியவருக்கு கொடுப்பனவை வழங்க மறுத்த அஞ்சல் அலுவலக உத்தியோகத்தர்கள்

May 15, 2025
இலங்கையில் மிக விரைவில் தாதியருக்கான பல்கலைக்கழகம்; நளிந்த ஜயதிஸ்ஸ உறுதி
செய்திகள்

இலங்கையில் மிக விரைவில் தாதியருக்கான பல்கலைக்கழகம்; நளிந்த ஜயதிஸ்ஸ உறுதி

May 15, 2025
Next Post
புத்தர் ஒரு தமிழர்- சிங்களம் அல்ல; ரஜமஹா விகாரையின் விகாராதிபதி வெளிப்படை பேச்சு!

புத்தர் ஒரு தமிழர்- சிங்களம் அல்ல; ரஜமஹா விகாரையின் விகாராதிபதி வெளிப்படை பேச்சு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.